அரசு ஊழியர் டு அரசு ஒப்பந்ததாரர்... எடப்பாடி ஆதரவாளர்(?) - புதுக்கோட்டை ஐ.டி ரெய்டு பின்னணி!

0

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. இவர் நெடுஞ்சாலை துறை அரசு ஒப்பந்ததாரராக இருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அவரின் தந்தை மாணிக்கம் நெடுஞ்சாலை துறையில் பணியாற்றிய நிலையில், அப்பா உயிரிழந்ததையடுத்து வாரிசு அடிப்படையில் பாண்டித்துரை நெடுஞ்சாலை துறையில் இளநிலை உதவியாளராக தனது பணியைத் தொடங்கியவர். பின்னர் புதுக்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட அலுவலகத்தில் உதவியாளராக பணி உயர்வு பெற்று பணியாற்றி வந்தார்.

பின்னர், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரராக மாறிய இவர் குறிப்பாக, ஒளிரும் மின்விளக்குகளில் தொடங்கி, பேரிகார்டு வரை நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் மூலம் பெருமளவில் பொருளாதாரம் ஈட்டி மிகப்பெரிய அளவில் சொத்துக்களை இவர் குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள ஹரிவே லயன்ஸ் என்ற பெயரில் இயங்கும் அவரின் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியிருக்கின்றனர். 3 கார்களில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 10 பேர் காலை 10 மணி முதலே சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும், அதே பகுதியில் உள்ள அவரின் வீடு, மேலாளர் பீட்டர் என்பவரின் வீடு, திருவப்பூர் அருகே இருக்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட 5 இடங்களில் இந்தச் சோதனையானது நடைபெற்றது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றிருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது. வருமானத்திற்கு அதிகமாக முறைகேடு செய்து சொத்து சேர்த்ததன் அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த ரெய்டு அடுத்தடுத்த நாள்கள் தொடரலாம் என்று வருமானவரித்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. உதவி கோட்ட அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றியவர், அதிமுக ஆட்சிக்காலத்தில் சில முக்கியமானவர்களுடன் நெருக்கம் ஏற்பட்ட நிலையில், தனது பணியை விட்டுவிட்டு நெடுஞ்சாலைத் துறையில் அரசு ஒப்பந்ததாரராக பணி தொடங்கியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் பாண்டித்துரை, முதலில் ஓ.பன்னீர்செல்வம் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த போதும், பின்னர் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த காலகட்டத்திலும் நெடுஞ்சாலைதுறையில் சாலையில் பதிக்கக்கூடிய ஒளி பிரதிபலிப்பான், சாலையில் வைக்கக்கூடிய பிரதிபலிப்பு பலகைகள் உள்ளிட்டவைகளை ஒப்பந்தம் எடுத்து வந்துள்ளார்.

தற்போதும், தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் இந்த ஒப்பந்தத்தை இவரே எடுத்து செய்து வருகிறார். இவர் பெயரில் மட்டுமின்றி இவரின் ஆதரவாளர்கள் பெயரிலும் அதிக அளவில் ஒப்பந்தங்களை எடுத்து செய்து வருவதாக தகவல். புதுக்கோட்டையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் என கூறப்படும் அரசு ஒப்பந்ததார் தொடர்புடைய இடங்களில் நடந்த ரெய்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


மேலும் படிக்க அரசு ஊழியர் டு அரசு ஒப்பந்ததாரர்... எடப்பாடி ஆதரவாளர்(?) - புதுக்கோட்டை ஐ.டி ரெய்டு பின்னணி!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top