`கடனுக்கு ஒப்புதல் வழங்கவில்லை; எஸ்பிஐ தலைமை அலுவலகத்தை தகர்ப்பேன்’ - பாகிஸ்தானிலிருந்து மிரட்டல்?!

0

மும்பையின் தென் பகுதியில் இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை அலுவலகத்திற்கு கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து மிரட்டல் போன் கால்கள் வந்துகொண்டிருக்கிறது. போனில் பேசும் நபர் தான் பாகிஸ்தானில் இருந்து பேசுவதாகவும், எனது கடனுக்கு ஒப்புதல் வழங்கவில்லையெனில் எஸ்பிஐ தலைவரை கடத்திச் சென்று கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். அதோடு எஸ்பிஐ வங்கியின் தலைமை அலுவலகத்தையும் தகர்ப்பேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த மிரட்டல் தொடர்பாக வங்கி நிர்வாகம் மும்பை மெரைன் டிரைவ் போலீஸில் புகார் செய்துள்ளது. அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

எஸ்பிஐ தலைவர் தினேஷ்

கொலை மிரட்டல் விடுத்த நபர் உண்மையிலேயே பாகிஸ்தானில் இருந்து மிரட்டல் விடுத்தாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். அதேசமயம் இந்த மிரட்டல் சம்பவத்தை தொடர்ந்து எஸ்பிஐ வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து கொண்டு தாவூத் இப்ராகிம் மற்றும் மற்றும் அவனது கூட்டாளிகள் கடத்தல் மற்றும் ஹவாலா பண பரிவர்த்தனை போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். அவனது ஆட்கள் தென்மும்பையில் அதிகம் பேர் இருக்கின்றனர். அவர்களில் யாருக்காவது எஸ்பிஐ வங்கி கடன் கேட்டு நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். கடந்த மாதமும் பாகிஸ்தானில் இருந்து மும்பை போலீஸாருக்கு மிரட்டல் கால்கள் வந்தது. அதில் மும்பையில் இதற்கு முன்பு கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்தியது போன்ற ஒரு தாக்குதலை மீண்டும் நடத்துவோம் என்று அதில் குறிப்பிட்டப்பட்டது. இதனால் மும்பை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.


மேலும் படிக்க `கடனுக்கு ஒப்புதல் வழங்கவில்லை; எஸ்பிஐ தலைமை அலுவலகத்தை தகர்ப்பேன்’ - பாகிஸ்தானிலிருந்து மிரட்டல்?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top