திமுக கவுன்சிலருக்கு கத்திக்குத்து... திமுக எம்.எல்.ஏ மகன் மீது புகார்! - பரமக்குடியில் பரபரப்பு

0

ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளராக மீண்டும் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பரமக்குடிக்கு வந்த அவரை வரவேற்கும் விதமாக பரமக்குடி ஐந்தாவது வார்டு தி.மு.க நகர்மன்ற உறுப்பினர் பாக்யராஜ் பேனர் வைத்துள்ளார். அதில் பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன் படம் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து எம்.எல்.ஏ முருகேசன் உறவினர் விக்கி (எ) விக்னேஷ் என்பவர் பாக்யராஜை திட்டியதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக எம்.எல்‌.ஏ முருகேசனை தொடர்பு கொண்டு கேட்கும் பாக்யராஜை அவர் மிரட்டியதாக ஆடியோ ஒன்றும் வெளியானது. இந்த ஆடியோவை பாக்யராஜ் தரப்பு வெளியிட்டது.

அதில், `பேனரில் படம் போடாததற்கு நீங்கள் சொல்லியதாக விக்கி என்பவர் தன்னை மிரட்டுகிறார்’ என தெரிவிக்கும் பாக்யராஜிடம், ``தொகுதி எம்.எல்.ஏ படம் போடாததினால் என் மகன் கேட்டிருப்பார்” என முருகேசன் பதில் அளிப்பதாக உள்ளது. மேலும், "என்னுடைய சொந்த பணத்தில் நான் பேனர் வைக்கிறேன். அதில் எதற்காக உங்கள் படத்தை போட வேண்டும்?” என பாக்கியராஜ் பதிலுக்கு கேட்கிறார். அதற்கு எம்.எல்.ஏ முருகேசன், ``ஓ அப்படியா, நீயா நானா பார்போம், உன் பலத்தையும் என் பலத்தையும் பார்ப்போம்” என கூறுகிறார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த ஆடியோ தொடர்பாக எம்.எல்.ஏ முருகேசன் தரப்பினர் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.

கவுன்சிலர் பாக்யராஜ்

இந்நிலையில் பரமக்குடியில் உள்ள பள்ளிகளில் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதில் எம்.எல்.ஏ முருகேசன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர். அப்போது பேனரில் படம் போடாதது தொடர்பாக அங்கிருந்த தி.மு.க கவுன்சிலர் பாக்யராஜிடம் எம்.எல்.ஏ முருகேசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

பின்னர் நிகழ்ச்சி முடிந்து கவுன்சிலர் பாக்யராஜ், பரமக்குடி வடக்கு நகர செயலாளர் ஜீவானந்தம் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பரமக்குடி ஐந்து முனை சந்திப்பில் சென்ற அவர்களை மூன்று கார்களில் வந்த எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் என சொல்லப்படுபவர்கள் பாக்யராஜை தாக்கி கத்தியால் விலாவில் குத்திவிட்டு தப்பிஒடியுள்ளனர்.

கத்திகுத்துப்பட்ட பாக்கியராஜிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்

தகவல் அறிந்து அங்கு வந்த பரமக்குடி நகர் காவல் நிலைய போலீஸார் படுகாயம் அடைந்த பாக்கியராஜிடம் விசாரணை நடத்திய பிறகு அவரை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து எம்.எல்.ஏ மகன் துரைமுருகன், அவரது உறவினர் விக்கி உள்ளிட்ட 25 நபர்கள் மீது பாக்கியராஜ் புகார் அளித்துள்ளார். அதேபோல் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாக்கியராஜ், ஜீவானந்தம், மதுசூதனன் ஆகியோர் மீது விக்கி புகார் அளித்துள்ளார்.

இருதரப்பு புகார் தொடர்பாக பரமக்குடி நகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் படிக்க திமுக கவுன்சிலருக்கு கத்திக்குத்து... திமுக எம்.எல்.ஏ மகன் மீது புகார்! - பரமக்குடியில் பரபரப்பு
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top