புரியும்படி பேசுங்கள் நிதி அமைச்சரே..!

0

பொருளாதாரம் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பின்னிப் பிணைந்தது. ஆனால், அதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமானது. இதற்கு நல்லதோர் உதாரணம்தான், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் பேசிய பேச்சு.

‘‘ரூபாய் மதிப்பு குறையவில்லை; டாலர் மதிப்பு உயர்கிறது’’ என்று அவர் பேசிய பேச்சு, பலரையும் பலமாக யோசிக்க வைத்துவிட்டது. ‘‘டாலர் மதிப்பு உயர்ந்தால், ரூபாய் மதிப்பு குறையத்தானே செய்யும், நிதி அமைச்சர் விநோதமான விளக்கத்தைத் தருகிறாரே!’’ என்று அவர் பேச்சைக் கேலி செய்து பலரும் மீம்ஸ் வெளியிட, அது வாட்ஸ்அப்பில் வைரலாக வலம் வந்தது.

உள்ளபடி பார்த்தால், மத்திய நிதியமைச்சர் சொல்லவந்த கருத்தில் தவறு எதுவும் இல்லை. உலகப் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக உலகின் பல்வேறு நாட்டு நாணயங்களின் மதிப்பு, டாலருக்கு எதிராகக் குறைந்திருக்கிறது. உதாரணமாக, இந்த ஆண்டில் டாலருக்கு நிகராக ஜப்பானின் யென்னின் மதிப்பு சுமார் 29%, பிரிட்டனின் பவுண்டின் மதிப்பு சுமார் 22%, தென் கொரியாவின் ஒன்னின் மதிப்பு சுமார் 19%, ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு சுமார் 19%, தாய் பத்தின் (Baht) மதிப்பு சுமார் 14% குறைந்துள்ளது.

ஆனால், இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக சுமார் 10% குறைந்துள்ளது. உலகின் பிற நாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில், இந்திய ரூபாயின் மதிப்பு ஓரளவுக்கே குறைந்துள்ளது என்பதே நிதி அமைச்சர் சொல்ல வந்த விஷயம். அதை அவர் சரியாக எடுத்துச் சொல்லியிருந்தால், அவர் கருத்து விமர்சனத்துக்குரிய தாக மாறியிருக்காது.

நாணய மாற்று (Currency Exchange) என்பது சிக்கலான விஷயம். அதை எல்லோரும் சரியாகப் புரிந்து வைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அப்படி இருக்க, இது மாதிரியான சிக்கலான விஷயங்களைப் பொதுவெளியில் பேசும்போது, அனைவரும் புரிந்துகொள்ளும்படி இருவேறு கருத்துக்கு வழி இல்லாத வகையில் பேச வேண்டும்.

சரி, இதெல்லாம் இருக்கட்டும். உலக நாணயங்களை ஒப்பிடும்போது இந்தியா பரவாயில்லை என்றுதான் சொல்ல முடிகிறதே தவிர, ‘இந்தியப் பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் இருக்கிறது’ என்று உரக்கச் சொல்ல முடியவில்லையே! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் 83 ரூபாய் என்று வந்து நிற்பது மட்டுமல்ல, கூடிய விரைவில் 84, 85 என்றுகூட வீழவே செய்யும் என்கிறார்கள். ரூபாய் மதிப்பு குறைவதைத் தடுக்க பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காமல், ‘சந்தையே அதன் மதிப்பை நிர்ணயிக்கட்டும்’ என ரிசர்வ் வங்கி வேடிக்கை பார்த்து வருகிறது.

இந்த நிலையில், நம் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் உறுதியானதாக மாற்ற நடவடிக்கை எடுப்பதன்மூலமே ரூபாயின் மதிப்பை அதிகரிக்க முடியும். இதற்கு மத்திய அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்பதுதான் விஷயம் தெரிந்தவர்கள் கேட்க விரும்பும் முக்கியமான கேள்வி.

- ஆசிரியர்


மேலும் படிக்க புரியும்படி பேசுங்கள் நிதி அமைச்சரே..!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top