`முன்னாள் அமைச்சரின் செக்ஸ் டார்ச்சர்; தாலிகட்டிய சிவசங்கர்' - புயலை கிளப்பும் ஸ்வப்னாவின் சுயசரிதை

0

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு நாடுகள் (யு.ஏ.இ) தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கு 2020-ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் பார்சலை எடுக்கச் சென்ற ஸரித், பார்சலை விடுவிக்க முயன்ற கேரள தலைமைச் செயலகத்தில் ஐ.டி துறையின் ஸ்பேஸ் பார்க்கில் அதிகாரியாக தற்காலிக பணியில் இருந்த ஸ்வப்னா சுரேஷ், ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர், சந்தீப் நாயர் என பலர் கைது செய்யப்பட்டனர். ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர் 98 நாள்கள் சிறைவாசத்துக்குப் பின் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். ஒன்றேகால் ஆண்டுகள் சிறையில் இருந்த ஸ்வப்னா சுரேஷ் கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சிவசங்கர் ஐ.ஏ.எஸ் - ஸ்வப்னா சுரேஷ்

இதற்கிடையே ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர் 'அஸ்வத்தாமாவு வெறும் ஒரு ஆனையானு' என்ற தலைப்பில் 176 பக்கம் கொண்ட சுயசரிதை புத்தகம் ஒன்றை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்டார். அந்த புத்தகத்தில், "திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த யு.ஏ.இ தூதரக பார்சலை விடுவிக்க உதவ வேண்டும் என ஸ்வப்னா சுரேஷ் உதவி கேட்டார். சுங்கத்துறை விஷயத்தில் நான் தலையிடமுடியாது என கூறிவிட்டேன். தங்கம் கடத்தல் வழக்கில் எனக்கு வேறு எந்த தொடர்பும் இல்லை. ஸ்வப்னாவின் கல்வித்தகுதியை பார்க்காமல் ஸ்பேஸ் பார்க்கில் வேலைக்கு சேர்த்ததால் என்னை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்தார்கள். ஸ்வப்னா இப்படி சதி செய்வார் என நினைக்கவில்லை’’ என கூறியிருந்தார்.

இந்த நிலையில் சிவசங்கரைப் போன்றே தனது சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார் ஸ்வப்னா. 'சதியுடே பத்ம வியூகம்' என்ற அந்த புத்தகத்தை திருச்சூர் கரண்ட் புத்தக நிலையம் நாளை வெளியிட உள்ளது. அந்த புத்தகத்தை விளம்பரப்படுத்தும் விதமாக ஸ்வப்னா எழுதியுள்ள சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்வப்னா தனது புத்தகத்தில், "முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர் சென்னையில் ஒரு கோயிலில் வைத்து என்னை திருமணம் செய்துகொண்டார். அப்போது எனது நெற்றியில் குங்குமம் வைத்து 'உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்' எனச்சொன்னார். நான் சிவசங்கரின் பார்வதியாக இருந்தேன். என்.ஐ.ஏ விசாரணையின்போதும் என் கழுத்தில் சிவசங்கர் கட்டிய மஞ்சள் தாலி கயிறு இருந்தது.

ஸ்வப்னா சுரேஷ் எழுதிய 'சதியுடெ பத்மவியூகம்' சுயசரிதை புத்தகம்

கேரளா முன்னாள் அமைச்சர் ஒருவர் எனக்கு பலமுறை எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார். அவர் தன்னை ஹோட்டலுக்கு வரும்படி அழைப்பு விடுத்து அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ்கள் என்னிடம் இப்போதும் இருக்கின்றன. அதை விசாரணை ஏஜென்சிகளிடமும் ஒப்படைத்துள்ளேன்.`பினராயி விஜயன் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த வழக்கில் இருந்து நாம் காப்பாற்றப்படுவோம்’ எனக்கூறினார்கள். அதனால்தான், `விசாரணை அதிகாரிகள் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கும்படி மிரட்டுகிறார்கள்’ எனவும், `அரசுக்கோ, முதல்வருக்கோ தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்பு இல்லை' என சிறையில் இருந்து ஆடியோ வெளியிட்டேன்" என புத்தகத்தில் கூறியுள்ளாராம்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர்

அதே சமயம் யார் மீதும் ஸ்வப்னா பாலியல் புகார் கூறவில்லை. முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் மோசடியில் ஈடுபட்டது, முன்னாள் அமைச்சர் ஜலீல், முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி நளினி நட்டோ உள்ளிட்ட பலருக்கு எதிரான தகவல்களை அந்த புத்தகத்தில் ஸ்வப்னா சுரேஷ் கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளாது. நாளை வெளியாகும் ஸ்வப்னாவின் சுயசரிதை கேரள அரசியலில் மீண்டும் சூறாவளியை கிளப்பும் என்கிறார்கள்.


மேலும் படிக்க `முன்னாள் அமைச்சரின் செக்ஸ் டார்ச்சர்; தாலிகட்டிய சிவசங்கர்' - புயலை கிளப்பும் ஸ்வப்னாவின் சுயசரிதை
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top