"அமித் ஷாவுக்கு எங்களின் சிறிய பரிசு!"- ஜம்மு சிறைத்துறை டிஜிபி-யை கழுத்தறுத்துக் கொன்ற தீவிரவாதிகள்

0

மத்திய அமைச்சர் அமித் ஷா ஜம்மு-காஷ்மீரில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இன்று அதிகாலையில் ஜம்மு-காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி-யை தீவிரவாதிகள் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர். ஜம்முவின் புறநகர்ப் பகுதியில் ஜம்மு-காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியாவின் இல்லம் இருக்கிறது. இன்று காலையில் ஹேமந்த் குமார் கழுத்தை அறுத்துக் கொலைசெய்யப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஹேமந்த் குமார் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த யாசிர் என்பவன் இந்தப் படுகொலையை செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. யாசிர் தற்போது தலைமறைவாகிவிட்டான். பாதுகாப்பு மிகுந்த வீட்டில் யாசிர் எப்படி கொலைசெய்துவிட்டு தப்பிச்சென்றான் என்பது மர்மமாக இருக்கிறது. போலீஸார் யாசிரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், படுகொலைக்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பான மக்கள் பாசிச எதிர்ப்பு படை இதற்கு பொறுப்பேற்று செய்தி வெளியிட்டுள்ளது. ``எங்களது சிறப்புப் படை ஜம்முவின் உதைவாலாவில் சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமாரைக் கொலைசெய்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ளூர் மக்கள் அல்லாதவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட அனைத்து தாக்குதல்களுக்கும் நாங்கள்தான் பொறுப்பு. இது போன்ற தாக்குதல்கள் இனியும் அதிகமாக நடக்கும்.

எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் நடக்கும். தற்போது நடத்தப்பட்டிருப்பது ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் செய்திருக்கும் அமைச்சர் அமித் ஷாவுக்கு எங்களது சிறிய பரிசு" என்று தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர். ஹேமந்த் குமார் கடந்த ஆகஸ்ட் மாதம்தான் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இது குறித்து கூடுதல் டிஜிபி முகேஷ் சிங் கூறுகையில், ``ஹேமந்த் குமாரின் வீட்டு வேலைக்காரன் யாசிர் தலைமறைவாகிவிட்டான். அவனை தேடி வருகிறோம். யாசிர் ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தைச் சேர்ந்தவன். கொலையாளி முதலில் ஹேமந்த் குமாரை மூச்சுத்திணறடித்துள்ளான். அதன் பிறகு உடைந்த பாட்டிலால் கழுத்தை அறுத்துள்ளான். அதன் பிறகு உடலை தீ வைத்து எரிக்க முயன்றுள்ளனர்" என்று தெரிவித்தார். மத்திய அமைச்சர் அமித் ஷாவின் சுற்றுப்பயணத்தின்போது தீவிரவாதிகளின் இந்தச் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 57 வயதாகும் ஹேமந்த் குமார் ஓய்வு பெற இன்னும் ஒரு ஆண்டே இருக்கும் நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து போலீஸார் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.


மேலும் படிக்க "அமித் ஷாவுக்கு எங்களின் சிறிய பரிசு!"- ஜம்மு சிறைத்துறை டிஜிபி-யை கழுத்தறுத்துக் கொன்ற தீவிரவாதிகள்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top