யானைகளை காவு வாங்கும் வாளையாறு - கஞ்சிகோடு ரயில்வே லைன்... தீர்வு தான் என்ன?

0

கோயம்புத்தூர் மாவட்டம், போத்தனூர் முதல் பாலக்காடு வரையிலான ரயில்வே வழித்தடத்தில், கடந்த 20 ஆண்டுகளில் 26 யானைகள் உயிரிழந்திருபதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அதே வழித்தடத்தில், தமிழக - கேரள எல்லையான வாளையாறு பகுதியில் இரண்டு பெண்‌ யானைகள் உயிரிழந்திருப்பது பெரும்‌ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்குள்ளான யானை

அக்டோபர் 14 -ம் தேதி அதிகாலையில் வாளையாறு - கஞ்சிக்கோடு இடையேயான ரயில்வே வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த விரைவு‌ ரயில் மோதி ஒரு பெண் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது . அக்டோபர் 18 அன்று அதே பகுதியில் ரயில் மோதி காயமுற்று, காட்டுப் பகுதியில் ஒரு பெண் யானை உயிரிழந்த தகவல் வனத்துறையினருக்கு கிடைத்தது. ஒரே வாரத்தில் வாளையாறு பகுதியில் மட்டும் ரயில் மோதி இரண்டு யானைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது. போத்தனூர் முதல் பாலக்காடு வரையிலான ரயில்வே வழித்தடத்தில், ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்கதையாகவே உள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பாரத சக்கரவர்த்தி ஆகியோரின் முன்னிலையில் நடந்தது. டிவிஷனல் ரயில்வே பொறியாளர் தாக்கல் செய்த மனுவில், கஞ்சிகோடு - வாளையாறு பகுதியில் ரயிலின் வேகத்தை குறைப்பது சாத்தியமில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு பதில் அளித்த நீதிபதிகள் ' அப்பகுதியில் ரயிலின் வேகத்தை குறைக்க வேண்டும்' என்று அறிவுறுத்தினர்.

பாலக்காடு பிரிவு ரயில்வே மேலாளரை நவம்பர் 24-க்குள் உயர்நீதிமன்ற அமர்வில் நேரடியாக ஆஜராகி விபத்து தொடர்பாக விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதுமட்டுமில்லாமல், தெற்கு ரயில்வே பொது மேலாளரை, யானைகள் உயிரிழப்பு மற்றும் விபத்துகளை தடுக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு ஒன்றை அமைத்து ஆய்வு அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அத்துடன் யானைகளின் வழித்தடத்தில் இயக்கத்தில் இருக்கும் செங்கல் சூளைகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் அதிரடியாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதைப் பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர் பாண்டியராஜனிடம் பேசினோம். அவர் பேசுகையில், '' எட்டிமடை, வாளையாறு, கஞ்சிகோடு பகுதிகளுக்கு இடையேயான ரயில்வே தடத்தில் தான் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. நடவடிக்கை எடுப்பதில் நிர்வாக ரீதியாக எல்லை பிரச்சனை வேறு வந்து விடுகிறது. கஞ்சிகோடு என்பது கேரள வனப்பகுதியாகும். இந்தக் குறிப்பிட்ட வழிதடத்தில் இரண்டு ரயில்வே லைன்கள் உள்ளன.

சுற்றுச்சூழல் ஆர்வலர் பாண்டியராஜன்

ஒன்று ஏ லைன், ஒன்று பி லைன். பி லைன் அடர் வனப்பகுதி வழியாக செல்கிறது. அதனால் பி லைனில் தான் அதிக விபத்துகளும் ஏற்படுகிறது. விபத்துகளை தடுக்க பி லைனில் இரவு நேர போக்குவரத்தை தடை செய்ய வேண்டும், இல்லையெனில் குறைந்தபட்சம் இரவு நேர போக்குவரத்தை குறைக்கவாவது செய்ய வேண்டும். போத்தனூர் முதல் பாலக்காடு வரையிலான பயணத்திற்கு மற்றொரு வழித்தடமான, போத்தனூர் - பொள்ளாச்சி - பாலக்காடு வழியில் ரயில்களை இயக்கலாம். இது ரயில்வே துறை சம்பந்தப்பட்ட விஷயம் என்று ஒதுங்கிவிடாமல், தமிழக எல்லைக்குள் வரும் எட்டிமடை முதல் வாளையாறு வரையிலான ரயில்வே வழித்தடத்தில் 13 கிலோமீட்டர் தூரத்திற்கு தெர்மல் சென்சிங் கேமராக்களை பொருத்த தமிழக வனத்துறையால் டெண்டர் விடப்பட்டது, வரவேற்கத்தக்கது.

இது தொடர்பான வழக்கு விசாரணையில் நீதிபதிகளின் உத்தரவு மிகச் சரியானது. ரயில் மோதி நடக்கும்‌ விபத்துகளுக்கும்‌, உயிரிழக்கும் உயிரினங்களுக்கும் யாராவது பொறுப்பேற்க வேண்டும். இப்பிரச்சினைக்கு ஒரே நிரந்தர தீர்வு உயர்மட்ட பாலம் அமைத்து அதில் ரயில்களை இயக்குவதுதான். மற்ற அனைத்து முயற்சிகளும் தற்காலிக ஏற்பாடாக தான் இருக்கும், நிரந்தர தீர்வாக ஒருபோதும் இருக்காது'' என்று கூறி முடித்தார்.

உயர்மட்ட ரயில்வே பாதை

விரைவாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நம்மை கொண்டு செல்லும் ரயில்கள், ஒரு சில இடங்களில் வன விலங்குகளின் உயிர்களுக்கு ஆபத்தாக இருப்பதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இந்திய ரயில்வே துறை, கேரள வனத்துறை, தமிழக வனத்துறை போன்ற அனைத்து துறைகளும் ஒன்று இணைந்து இதற்கான நிரந்தர தீர்வை கொண்டு வர வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.


மேலும் படிக்க யானைகளை காவு வாங்கும் வாளையாறு - கஞ்சிகோடு ரயில்வே லைன்... தீர்வு தான் என்ன?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top