``'முதலில் நான் ஒரு விவசாயி; பிறகு தான் அரசியல்வாதி' என்பேன்” - சுப்புலட்சுமி ஜெகதீசன்

0

கீழ்பவானி பாசனத் திட்டத்தின்கீழ் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் இந்த தண்ணீர் 200 கி.மீ.தூரம் பிரதான வாய்க்காலில் பயணித்து கடைமடைப்பகுதியான முத்தூர், மங்களப்பட்டியை சென்றடைகிறது. லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் கீழ்பவானி பாசனத் திட்டத்தை உருவாக்கி, செயல்படுத்தியதில் அப்போதைய ஈரோடு எம்.எல்.ஏ எம்.ஏ.ஈஸ்வரனுக்கு முக்கியப் பங்கு உண்டு. சுதந்திரப் போராட்ட தியாகியாகவும் விளங்கிய எம்.ஏ.ஈஸ்வரனின் பிறந்த நாளையொட்டி கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அவரின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், திமுக முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் பங்கேற்றார்.

M.A.Eswaran

நிகழ்ச்சியில் பேசிய அவர், ``நான் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட காலத்திலிருந்து தொடர்ந்து விவசாயிகளின் முன்னேற்றத்துக்காகவும், வளர்ச்சிக்காகவும் தான்  குரல் கொடுத்து வந்தேன் என்பது உங்களில் பலருக்கும்  தெரியும்.
சட்டமன்றத் கூட்டத்திலோ அல்லது பொதுக்கூட்டத்திலோ பேசும்போது முதலில் நான் ஒரு விவசாயி பிறகு தான் அரசியல்வாதி என்று கூறுவேன். அந்தளவுக்கு விவசாயம் என்பது எனது உடலின் ஒவ்வொரு ரத்த அணுவிலும் கலந்துள்ளது. சிறுவயதில் நாம் படித்திருக்கிறோம். வரப்புயர நீர் உயரும். நீர் உயர நெல் உயரும். நெல் உயர குடி உயரும். குடி உயர கோன் உயருவான். குடி உயர்ந்தால் தான் கோன் உயரும். இங்கு கோன் என்பது அரசனை குறிக்கிறது.

இன்று விவசாயத்தின் அருமையையும், அதன் முக்கியத்துவத்தையும் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு சொல்லித் தர மறந்து விட்டோம். விவசாயம் செய்வதையே கேவலம் என்று நினைக்கிறார்கள். எல்லாம் ஐடி படிக்கிறார்கள். ஆனால் நான் ஒன்று சொல்கிறேன். கம்ப்யூட்டர் இன்ஜினியரை விட விவசாயிகளின் மூளை சிறந்தது. செயல்திறன்மிக்கது. பருவ காலத்துக்கு ஏற்ப,விவசாயத்தை எப்படி செய்வது, பருவ மாற்றத்துக்கு ஏற்றவாறு இடுபொருள்களின் தேவையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது விவசாயிக்கு தெரியும். அப்படிபட்ட விவசாயத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த தவறியதன் விளைவே இப்போது விவசாயத்தை கேவலமாக எண்ணும் சூழ்நிலை வந்துள்ளது.

சுப்புலட்சுமி ஜெகதீசன்

விவசாயிகளை உதாசீனம் செய்ததன் காரணமாகவே அடுத்த தலைமுறையினரை விவசாயத்தில் ஈடுபடுத்த தவறிவிட்டோம்.  
எனவே பள்ளி பருவத்திலேயே விவசாயத்தையும் பாடத்திட்டத்தில் சேர்த்தால் தான் அடுத்த தலைமுறைக்கு விவசாயத்தை கொண்டு செல்ல முடியும். அதற்கான முயற்சியை அரசு இப்போதுதான் எடுத்துள்ளது. எனவே விவசாயத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் அடுத்த தலைமுறையும் ஈடுபடுத்தினால் மட்டுமே விவசாயத்தை காப்பாற்ற முடியும்” என்றார்.


மேலும் படிக்க ``'முதலில் நான் ஒரு விவசாயி; பிறகு தான் அரசியல்வாதி' என்பேன்” - சுப்புலட்சுமி ஜெகதீசன்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top