திராவிட எதிர்ப்பு கூட்டமைப்பு உருவாக்கம்... திமுக-வின் ரியாக்‌ஷன் என்ன?!

0

தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகள் தொடர்ந்து ஆட்சியிலிருந்து வருகிறது. இந்தச்சூழலில், கடந்த சில மாதங்களாகவே திராவிடம் குறித்த கருத்துக்கள் திமுகவினரால் அதிகம் பேசப்பட்டு வருகிறது. முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அனைவரும் திமுக அரசைத் திராவிட மாடல் அரசு என்று தொடர்ந்து புகழ்பாடி வருகிறார்கள். திமுகவின் திராவிட கருத்துக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா உள்ளிட்டோரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் எதிர்வினையாற்றி வருகிறார்கள். இந்தச்சூழலில், 59 சிறு சிறு இயக்கங்கள் இணைந்து திராவிட ஆட்சிக்கும் எதிர்ப்பு தெரிவித்து திராவிட எதிர்ப்பு கூட்டமைப்பு என்ற ஒன்றை உருவாக்கியிருக்கிறது.

ஏர்போர்ட் மூர்த்தி

இதுகுறித்து, புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கூறுகையில், " அயோத்திதாசர், ரெட்டமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, மதுரை பிள்ளை, பி.வி.சுப்பிரமணியம் உள்ளிட்ட பட்டியல் சமூக மக்களின் வளர்ச்சிக்காகப் போராடிய தலைவர்களின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது. 1940 வரை பெருவாரியான பட்டியல் சமூகத் தலைவர்கள் தமிழ்நாட்டில் பெரும் ஆளுமையாக இருந்தனர். அதற்குப் பின் பட்டியல் சமூகத் தலைவர்கள் யாரும் தன்னெழுச்சியாக வந்துவிடாதபடி திராவிட கழகம் பார்த்துக்கொண்டது. சாதி வேறுபாடு அதிகமாகக் காணப்படும் உத்தரப்பிரதேசத்தில் ஒரு பட்டியல் சமூகப்பெண் முதல்வராக முடிகிறது. பீகாரில் வரமுடிகிறது. ஆனால், ஒரு பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர் தமிழகத்தில் முதல்வராகவோ, துணை முதல்வராகவோ வரமுடிவதில்லை. இவற்றுக்கெல்லாம் காரணம் திராவிட இயக்கங்களும், கட்சிகள் தான். எனவே, எங்களின் உரிமை இழப்புகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை இருக்கிறது" என்றார். 

ரேவதி நாகராஜன்

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரேவதி நாகராஜன், "திராவிட கட்சிகள் அனைத்தும் பறையர் சமூகத்தை ஜூரோவாக வைத்திருக்கிறது. அரும்பாக்கத்தில் வீடுகளை அப்புறப்படுத்தி எங்களின் அடிமடியில் கைவைத்தார்கள். அப்போது கடும் எதிர்ப்பை தெரிவித்தோம். பறையர் சமூக மக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் தலைவர்கள் திராவிட கட்சிகளின் கைக்கூலிகளாக இருக்கிறார்கள். எங்கள் தாத்தா அயோத்தி தாசர் பண்டிதரும், ரெட்டமலை சீனிவாசனும் தான் பட்டியல் இனம் என்ற ஒன்றைக் கொண்டுவந்தார்கள். தமிழ்நாட்டில் பறையர் இன மக்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகிறார்கள்" என்றார். 

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இதுகுறித்து, திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ``2009-ல் கொடுக்கப்பட்ட 18 சதவீத இட ஒதுக்கீட்டில் அதிகமான இட ஒதுக்கீடு பறையர் சமூகத்திற்குத் தான் இருந்தது. திராவிட இயக்கத்தால் படிப்பு, உயர் கல்வி, வங்கிக் கடன் கிடைக்காமல் போய்விட்டதா? பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு முதன் முதலில் காங்கிரீட் வீடு கட்டிக்கொடுத்து திமுக அரசு தான். இந்த திட்டத்தின் மூலம் அதிகம் பயனடைந்தது அவர்கள் சொல்லும் பறையர் சமூகம் தான்.  ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே தலைவர் என்றால் அது கலைஞர் தான். இதைப் பார்க்கும் போது, உத்தரப்பிரதேசம், குஜராத்தில் சாதி ரீதியான, மத ரீதியான பிளவை மக்களிடம் ஏற்படுத்தி அதில் குளிர்காயும் பாஜக தமிழ்நாட்டில் அதை இவர்கள் மூலமாகச் செய்யப் பார்க்கிறது. இதில் ஒன்றாகத் தான் இந்த ஒருங்கிணைப்புக் குழு இருக்கும் என்று நினைக்கிறேன். திராவிட இயக்கம் என்ற ஒன்று இல்லையென்றால் இன்றைக்கு ஏர்போர்ட் மூர்த்தி எப்படி உருவாகியிருப்பார்? திராவிட இயக்க எதிர்ப்பு என்றாலே அனைவருக்கும் தெரியும் அவர்கள் பாஜகவின் கையாள்கள் தான் என்று" என்று கூறினார். 


மேலும் படிக்க திராவிட எதிர்ப்பு கூட்டமைப்பு உருவாக்கம்... திமுக-வின் ரியாக்‌ஷன் என்ன?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top