`ஷிண்டே ராஜ்ஜியத்தை மீண்டும் கொண்டு வாருங்கள்” - சிவசேனா போட்டி பொதுக்கூட்டத்தில் உத்தவ் சகோதரர்

0

மும்பையில் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணிகள் சார்பாக நேற்று இரவு தனித்தனியாக பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது. இப்பொதுக்கூட்டத்திற்கு மகாராஷ்டிரா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அழைத்து வரப்பட்டு இருந்தனர். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சார்பாக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உத்தவ் தாக்கரே குடும்பத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். உத்தவ் தாக்கரேயின் மைத்துனி ஸ்மிதா தாக்கரே, சகோதரர் மகன் நிஹர் தாக்கரே, உத்தவ் தாக்கரே சகோதரர் ஜெய்தேவ் தாக்கரே ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய ஜெய்தேவ், ``ஷிண்டே ராஜ்ஜியத்தை திரும்ப கொண்டு வாருங்கள்” என்று கேட்டுக்கொண்டார். ``நான் தாக்கரே குலத்தை சேர்ந்தவன் என்பதற்காக எந்த அணிக்கு செல்வதைப்பற்றியும் கவலைப்படவில்லை. ஷிண்டேயை நான் அதிகமாக விரும்புகிறேன். ஏனென்றால் துடிப்பான செயல்பாடுகளால் தான் ஷிண்டே இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.

கடந்த 5 நாள்களாக நான் ஷிண்டே அணியில் சேரப்போகிறேனா என்று கேட்டு தொடர்ச்சியாக போன் அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது. இந்த தாக்கரே யாருடனும் இணைந்திருப்பதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஷிண்டேயின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. மகாராஷ்டிராவிற்கு இது போன்ற ஒரு துடிப்புள்ள நபர் தேவை. ஷிண்டே மீதான பற்று மற்றும் அன்பு காரணமாகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். மகாராஷ்டிராவிற்கும், சிவசேனாவிற்கும் பாரம்பரியமும், வரலாறும் உண்டு. ஷிண்டேயை தனித்து விட்டுவிடாதீர்கள் என்பது எனது வேண்டுகோள். ஏழைகளாக இருந்தாலும் சரி விவசாயிகளாக இருந்தாலும் சரி அவர்களுக்காக ஷிண்டே ஒரு விவசாயியை போல் கடினமாக வேலை செய்வது வருகிறார். எனவே அனைத்தையும் புறந்தள்ளி விட்டு ஷிண்டே ராஜ்ஜியத்தை கொண்டு வாருங்கள். முழுவதுமாக தேர்தல் நடத்துங்கள். முழு ஆதரவுடன் மீண்டும் ஷிண்ட ஆட்சிக்கு வரட்டும்” என்று தெரிவித்தார்.

சிவசேனா தலைவர் பால் தாக்கரே உயிரோடு இருந்த காலத்தில் இருந்தே ஜெய்தேவ் தாக்கரேயை தங்களது குடும்பத்தில் இருந்து ஒதுக்கியே வைத்திருந்தார். கட்சியில் ஏற்பட்டு இருந்த அதிகார போட்டி காரணமாக சிவசேனாவில் ஜெய்தேவ் தாக்கரேயை ஆரம்பத்திலேயே உத்தவ் தாக்கரே ஓரங்கட்டிவிட்டார். இதனால் பெரிய அளவில் சிவசேனாவில் உத்தவ் மற்றும் ஜெய்தேவ் இடையே அதிகாரப்போட்டி ஏற்படவில்லை. தற்போது உத்தவ் தாக்கரே மீது இருந்த வெறுப்பை ஷிண்டே மூலம் ஜெய்தேவ் வெளிப்படையாக காட்டி இருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்..


மேலும் படிக்க `ஷிண்டே ராஜ்ஜியத்தை மீண்டும் கொண்டு வாருங்கள்” - சிவசேனா போட்டி பொதுக்கூட்டத்தில் உத்தவ் சகோதரர்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top