ஒன் பை டூ

0

இராஜீவ்காந்தி, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

``ஜெயக்குமாரின் கருத்து சிரிக்கும்படியாக இருக்கிறது. ஜெயலலிதாவும் சசிகலாவும் எந்தப் பின்புலத்திலிருந்து கட்சிக்கு வந்தவர்கள் என்பதை அவர் மனசாட்சியுடன் சிந்திக்க வேண்டும்.சினிமாவில் நடிகை என்ற ஒரே காரணத்துக்காகவே ஜெயலலிதாவுக்குப் பதவி கொடுக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்துக்காக சசிகலாவுக்குக் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ரசிகர் மன்றத்திலிருந்து வந்த ஜெயக்குமாருக்கு தி.மு.க-வின் ஜனநாயகத்தைப் பற்றியும், திராவிடப் பின்புலம் குறித்தும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம் ‘அம்மா வாழ்க’ நாமம் மட்டுமே. தி.மு.க-போல உறுப்பினர் தேர்தலில்கூட இட ஒதுக்கீடு செய்து, ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தும் கட்சியை வேறு எங்குமே காண முடியாது. தி.மு.க-வில் உண்மையாக உழைத்தால், உரிய இடம் வழங்கப்படும். இதெல்லாம் காலைப் பிடித்தே பொறுப்புக்கு வந்தவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அ.தி.மு.க-வின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட பல முக்கியத் தலைவர்கள் இப்போது இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டார்கள். அ.தி.மு.க என்ற கட்சியை பா.ஜ.க-விடம் அடகுவைத்துவிட்டு தலைமைக்குப் போட்டி போட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு தி.மு.க-வைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?’’

இராஜீவ்காந்தி,
பாபு முருகவேல்

பாபு முருகவேல், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், அ.தி.மு.க

``மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறார். தி.மு.க-வில் ஒரு சாதாரண கிளைச் செயலாளர் தொடங்கி, கட்சிக்காக இரவு பகல் பாராமல் உழைத்தவர்கள், 1,000 மேடைகளில் பேசியவர்கள் எனப் பலரும் இன்றுவரை எந்த உயரிய பொறுப்புக்கும் வர முடிந்ததில்லை. இது தி.மு.க-வின் மாபெரும் சாபக்கேடு என்பது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் ஒரு குறுநில மன்னராக இருந்துகொண்டு தனக்குக் கீழ் யாரையும் வளரவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை கட்சிக்காக உழைத்தால் ஓர் அடிமட்ட தொண்டனும் தலைவராகலாம். இதற்குச் சிறந்த உதாரணம், சேலத்தின் ஓர் ஓரத்தில் கிளைக் கழகச் செயலாளராகப் பணியைத் தொடங்கிய எடப்பாடியார், மாநில முதல்வராகப் பொறுப்பு வகித்திருக்கிறார். ஆனால், தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்களைப் புறம்தள்ளி, தன்னைத் தலைவராக முன்னிறுத்திக்கொண்டவர் கருணாநிதி. தனக்குப் பின்னும், கட்சிக்காக ஆண்டுக்கணக்கில் உழைத்த பலரையும் விட்டுவிட்டு தனது மகனைப் பொறுப்புக்குக் கொண்டுவந்தார். அதனால்தான் இன்று மூத்த அமைச்சர்கள் பலரும் உதயநிதிக்குப் பல்லக்குத் தூக்குவதைப் பார்க்க முடிகிறது. குடும்பக் கட்சி நடத்தும் இவர்களுக்கு அ.தி.மு.க குறித்துப் பேச யோக்யதையே கிடையாது.’’


மேலும் படிக்க ஒன் பை டூ
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top