கேரள நரபலி: `மனித இறைச்சிக்கு அதிக பணம்' - ஃபிரிட்ஜில் பாதுகாக்கப்பட்ட துண்டுகளாக்கப்பட்ட உடல்

0

கேரள மாநிலத்தில் இரண்டு பெண்களை நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த முஹம்மது ஷாஃபி, பத்தனம்திட்டா இலந்தூரைச் சேர்ந்த பாரம்பர்ய வைத்தியர் பகவல்சிங், அவரின் மனைவி லைலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இப்போது மூவரும் போலீஸ் காவலில் உள்ளனர். இரட்டை நரபலி நடந்த பகவல் சிங்கின் வீட்டில் மூவரையும் அழைத்துச் சென்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பகவல் சிங் வீட்டிலும், ஃப்ரிட்ஜிலும் ரத்தக்கறைகள் இருந்தது கண்டறியப்பட்டன. மனித இறைச்சி சமைத்த பாத்திரங்களும், உடலை வெட்ட பயன்படுத்திய மூன்று கத்திகள், ஒரு வெட்டுகத்தி, மரக்கட்டை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இரண்டு மோப்பநாய்கள் மூலம் வீடும், வீட்டைச்சுற்றியுள்ள வளாகமும் சோதிக்கப்பட்டது. தடவியல் நிபுணர்களும் வீட்டில் தடயங்களை சேகரித்தனர்.

நரபலி கொடுக்கப்பட்ட வீட்டு வளாகத்தில் மோப்பாய் சோதனை

மேலும் பெண் உருவம் போன்ற டம்மி உடல் ஒன்றை பகவல் சிங்கின் வீட்டுக்கு கொண்டு சென்று நரபலி கொடுத்தது எப்படி என்பதை லைவாக செய்யவைத்து மூவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஃப்ரிட்ஜில் ரத்தம் எப்படி வந்தது என லைலாவிடம் கேட்டதற்கு, நரபலி கொடுத்ததில் சுமார் 10 கிலோ இறைச்சியை பிரிட்ஜில் இரண்டு நாள்களாக வைத்திருந்தாக அவர் கூறியுள்ளார். சமைத்த மனித இறைச்சியை சாப்பிட பகவல் சிங் மறுத்திருக்கிறார். இதனால், லைலா அவரது வாயில் இறைச்சியை திணித்துள்ளார். ஆனால், பகவல்சிங் இறைச்சியை துப்பிவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் முஹம்மது ஷாஃபியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷாஃபி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, ``ஸ்ரீதேவி என்ற போலி ஃபேஸ்புக் ஐ.டி மூலம் பகவல் சிங்கிடம் பெண் போன்று பழகியுள்ளார் ஷாஃபி. அது பெண்தானா என்பதை கண்டறிய மெசேஞ்சரில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும்படி பகவல் சிங் கூறியுள்ளார். கிரிமினலாக யோசித்த ஷாஃபி எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பேச வைத்து மெசேஞ்சர் மூலம் சில வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

லைலா, பகவல் சிங்

முதலில் செல்வம் பெருக என சாதாரண பூஜைகளை செய்து நடித்துள்ளார் முஹம்மது ஷாஃபி. அப்போது சிறிது சிறிதாக பகவல்சிங் தம்பதியிடம் இருந்து ஆறு லட்சம் ரூபாய் வரை ஷாஃபி வாங்கியுள்ளார். அந்த பணத்தை திரும்ப கேட்டபோது, இவர்களை கொலை வழக்கில் சேர்த்துக்கொண்டால் ஏற்கனவே வாங்கிய பணத்தை கேட்கமாட்டார்கள், மிரட்டி கூடுதல் பணம் பறிக்கலாம் என ஷாஃபி திட்டமிட்டிருக்கிறார். அதற்காகத்தான் நரபலி பூஜை என்ற ஐடியாவை சொல்லியிருக்கிறார். நரபலி கொடுத்தால் பலன் கிடைக்குமா என ஸ்ரீதேவி ஃபேஸ்புக் ஐ.டி-யிடம் சந்தேகம் கேட்டுள்ளார். நான் அப்படி பூஜை செய்து பலன் கிடைத்தது என ஸ்ரீதேவி ஃபேஸ்புக் ஐடி-யில் இருந்து பதில் வந்துள்ளது. அதை நம்பி நரபலிக்கு தயாராகியுள்ளார் பகவல் சிங்.

நரபலி கொடுக்கப்பட்ட ரோஸ்லி, பத்மா

இரண்டாவது நரபலி கொடுத்த சமயத்தில் மனித இறைச்சி விற்றால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் எனவும். மார்பகம், இதயம், ஈரல் என ஒவ்வொரு உறுப்புகளின் இறைச்சிக்கும் தனித்தனி விலை வைத்து விற்பனை செய்யலாம் எனவும் ஷாஃபி ஐடியா கொடுத்துள்ளார். மேலும், மனித இறைச்சி வாங்க பெங்களூரில் இருந்து ஒரு வியாபாரி வருவதாக ஷாஃபி கூறியுள்ளர். அதற்காக இறைச்சியை ஃபிரிட்ஜில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். ஷாஃபி சொன்னபடி யாரும் வராததால் இறைச்சியை குழிதோண்டி புதைத்துள்ளனர். ஷாஃபி சொன்னதை எல்லாம் தம்பதியினர் நம்பியதன் பின்னணி குறித்தும் மேலும் விசாரணை நடத்தவேண்டியது உள்ளது" என்றனர்.


மேலும் படிக்க கேரள நரபலி: `மனித இறைச்சிக்கு அதிக பணம்' - ஃபிரிட்ஜில் பாதுகாக்கப்பட்ட துண்டுகளாக்கப்பட்ட உடல்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top