புதிய கல்விக் கொள்கையை சத்தமின்றி நடைமுறைப்படுத்துகிறதா தமிழக கல்வித்துறை?!

0

இந்தியாவில் 34 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட `தேசிய கல்விக் கொள்கை 1986'-க்கு மாற்றாக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு புதிய தேசியக் கல்விக் கொள்கை- 2020-ஐ உருவாக்கியது. இந்த கல்விக் கொள்கையின் வரைவு வெளியானபோதே, தமிழ்நாட்டிலிருந்து மிகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. மேலும், தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும், ஆதரவாகவும் குரல்கள் எழுந்தன.

தமிழக ஆளுநர் ரவி

பிரதமர் மோடி முதல் ஆளுநர் ஆர்.என்.ரவி வரை எல்லா மேடைகளிலும் ஆதரவாகும், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முதல் தி.மு.க கூட்டணியிலுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுமென புதிய கல்விக் கொள்கை முற்றிலுமாக அரசியல் கருவியாகவே இருக்கிறது. இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறது தி.மு.க அரசு. இருந்தபோதும், தேசிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களை பெயர் மாற்றி சத்தமில்லாமல் அமல்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக, நான் முதல்வன், இல்லம் தேடிக் கல்வி, தகைச்சால் பள்ளி, எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட தேசிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களை பெயரை மட்டும் மாற்றி தமிழ்நாடு அரசு அமல்படுத்தியிருப்பதாக பா.ஜ.க குற்றச்சாட்டை முன்வைத்தது. அதேபோல, இலவச மதிய உணவுத் திட்டம், காலை உணவளிக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்ற அம்சம் தேசிய கல்விக் கொள்கையில் இருக்கிறது.

மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்

அதைப் போலவே, அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. மேலும், நான்காம், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முறையும் தேசிய கல்விக் கொள்கையில் உள்ளது. இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கையில் உள்ள, வயது வந்தோருக்கான ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்’ (New India Literacy Programme) என்ற திட்டத்தை அதே பெயரில் செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது.

தேசிய தகவல் மையம், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம், தேசிய திறந்தவெளி பள்ளி ஆகியவற்றுடன் இணைந்து 2027-ம் ஆண்டுக்குள் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்ட 5 கோடி பேருக்கு தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதே புதிய பாரத எழுத்தறிவு திட்டமாகும். அதன்படி, தமிழ்நாட்டில் 5 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இலக்கு நிர்ணயித்திருக்கிறது. இதற்கான அறிவிப்பை பள்ளிசாரா மற்றும்‌ வயது வந்தோர்‌ கல்வி இயக்குநர் குப்புசாமி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியிருக்கிறார். இது தமிழ்நாடு அரசின் செயலுக்கு இன்னோர் எடுத்துக்காட்டு என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள்.

அதே போல, தேசிய கல்விக் கொள்கையிலுள்ள பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட படிப்புகளை பயிலும் திட்டத்தை எல்லா பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் அமல்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) அண்மையில் அறிவித்திருக்கிறது. இதை முறையாகச் செயல்படுத்தாத பல்கலைக்கழகங்களுக்கு, யு.ஜி.சி வழங்கும் மானியங்களை நிறுத்தவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் காரணமாக, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை தமிழ்நாடு உயர்கல்வித்துறை ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிது.


மேலும் படிக்க புதிய கல்விக் கொள்கையை சத்தமின்றி நடைமுறைப்படுத்துகிறதா தமிழக கல்வித்துறை?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top