`கேரள கவர்னரின் ஒரு ரோமத்தை தொட்டாலும், ஆட்சியைக் கலைக்க வேண்டும்!' - சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

0

கேரளாவில் 9 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் யு.ஜி.சி விதிமுறைப்படி நியமிக்கப்படவில்லை எனவும், அவர்கள் 9 பேரும் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான் தடாலடி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதையடுத்து துணைவேந்தர்கள் கோர்ட்டுக்குச் சென்றனர். கவர்னருக்கு நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டு எனவும், கவர்னரின் கடிதத்துக்கு நவம்பர் 3-ம் தேதிக்குள் துணைவேந்தர்கள் விளக்கம் அளிக்க வேண்டும், தற்காலிகமாக பதவி விலக வேண்டாம் எனவும் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், கவர்னரை சீண்டும் விதமாக கேரள நிதி அமைச்சர் பாலகோபால், "உ.பி-யில் துணைவேந்தராக இருப்பவர்களுக்கு ஐம்பது முதல் நூறு செக்யூரிட்டி கார்டுகள் உண்டு. அங்குள்ள போரட்டக்காரர்களால் பிரச்னை ஏற்படும் என்பதால்தான் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அங்கிருந்து வருபவர்களுக்கு கேரள பல்கலைக்கழகங்களின் விஷயங்களை புரிந்துகொள்ள முடியாது" எனப் பேசினார். "கவர்னர் பதவியின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படும் விதமாக அமைச்சர்கள் விமர்சித்தால் அமைச்சர் பதவியை திரும்பபெறும் நடவடிக்கை எடுக்கப்படும்" என ஏற்கெனவே கவர்னர் தெரிவித்திருந்தார்.

சுப்பிரமணியன் சுவாமியின் ட்வீட்

இதைத் தொடர்ந்து பாலகோபால் நாட்டின் ஒற்றுமையை தகர்க்கும் விதமாகவும், கவர்னரை தவறாகப் பேசியதாகவும் கூறி அவரது அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பினார் கவர்னர் ஆரிப் முகமதுகான். `கவர்னர் சொல்லுவதுபோல நிதி அமைச்சர் எதுவும் சொல்லிவிடவில்லை. எனவே அமைச்சரை நீக்க வேண்டிய அவசியம் இல்லை' என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், கவர்னர்-முதல்வரின் மோதலுக்கு இடையே ஆட்டத்தில் மூக்கை நுழைத்திருக்கிறார் பா.ஜ.க முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி.

கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன்

சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியக் குடியரசுத் தலைவரையும் அதன் மூலம் அரசியலமைப்பில் மையத்தையும் கேரள ஆளுநர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதை கேரளாவின் கம்யூனிஸ்டுகள் உணரட்டும். ஆளுநரின் ஒரு ரோமத்தை தொட்டாலும், மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய மோடி அரசு தயாராக இருக்க வேண்டும்" என காட்டமாகப் பதிவிட்டிருக்கிறார். சுப்பிரமணியன் சுவாமியின் ட்விட்டர் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கமெண்ட்டுகள் வந்தவண்ணம் உள்ளன.


மேலும் படிக்க `கேரள கவர்னரின் ஒரு ரோமத்தை தொட்டாலும், ஆட்சியைக் கலைக்க வேண்டும்!' - சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top