Doctor Vikatan: புற்றுநோய் பாதிப்பைக் கண்டுபிடிக்க என்ன வழி?

0

Doctor Vikatan: ஒருவருக்கு உடலில் எங்காவது புற்றுநோய் இருக்கிறதா என கண்டுபிடிக்க வசதி உள்ளதா? நாமே கண்டுபிடிக்க முடிந்தால், என் போன்ற முதியவர்கள் அலர்ட் ஆக முடியுமே?

லட்சுமி ஆறுமுகம், விகடன் இணையதளத்தில் இருந்து.

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்.

புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்

அறிகுறிகளை வைத்ததான் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை யூகித்து, டெஸ்ட் செய்து அதை உறுதி செய்ய முடியும். புற்றுநோய்க்கான டெஸ்ட்டை பொதுவாக 'கேன்சர் ஸ்கிரீனிங்' என்று சொல்கிறோம். ஒவ்வோர் உறுப்புக்கும் இப்படித் தனித்தனியே 'கேன்சர் ஸ்கிரீனிங்' செய்ய முடியும்.

உதாரணத்துக்கு, மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய `மேமோகிராம்' சோதனை அவசியம். அதையும் ஒரே ஒருமுறை மட்டும் செய்து பார்த்தால் போதாது. இரண்டு வருடங்களுக்கொரு முறையாவது செய்து பார்க்க வேண்டும். அதுவே குடும்பப் பின்னணியில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் பாதிப்பு இருந்தால் அந்தக் குடும்பத்துப் பெண்கள் ஒவ்வொரு வருடமும் அந்த டெஸ்ட்டை அவசியம் செய்து பார்க்க வேண்டும்.

அடுத்தபடியாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டுபிடிக்க 'பாப் ஸ்மியர்' என்றொரு டெஸ்ட் இருக்கிறது. இதை மூன்று வருடங்களுக்கொரு முறை செய்ய வேண்டும். ஹியூமன் பேப்பிலோமா வைரஸுக்கான டெஸ்ட்டையும் செய்து பார்க்கலாம்.

மார்பகப் புற்றுநோய்

எனவே இப்படித்தான் ஒவ்வோர் உறுப்புக்குமான புற்றுநோய் பாதிப்பை உறுதி செய்ய முடியுமே தவிர, புற்றுநோய் பாதிப்புக்கான பொதுவான டெஸ்ட் என எதுவும் இதுவரை இல்லை. அது இன்னும் ஆராய்ச்சி நிலையில்தான் இருக்கிறது. அது முழுமையடைய சில வருடங்கள் ஆகலாம்.

ஒரு செ.மீ கட்டியில் கிட்டத்தட்ட 100 கோடி புற்றுநோய் செல்கள் இருக்கலாம். எனவே இந்த செல்கள் பெரிதானால்தான் டெஸ்ட்டில் கண்டுபிடிக்க முடியும். அதாவது அவை செ.மீ அளவுக்கு மாறினால்தான் நமக்கு அறிகுறிகளே தெரிய ஆரம்பிக்கும். மி.மீ அளவில் இருக்கும்போது தெரியாது.

அதுவே மேமோகிராம் சோதனையில் புற்றுநோய் செல்கள் மி.மீ அளவில் இருக்கும்போதே கண்டுபிடித்துவிட முடியும். அதனால்தான் குடும்பப் பின்னணியில் புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் இந்தச் சோதனையைத் தவறாமல் செய்து பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புராஸ்டேட் சுரப்பியை பாதிக்கும் புற்றுநோய்க்கு பிஎஸ்ஏ (Prostate-Specific Antigen (PSA) Test) என்றொரு ரத்தப் பரிசோதனை இருக்கிறது. பிஎஸ்ஏ அதிகமான எல்லோருக்கும் புராஸ்டேட் புற்றுநோய் வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் அந்த அளவுகள் அதிகமாக இருப்பவர்கள், மேற்கொண்டு சோதனை செய்துபார்த்து மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

நுரையீரல் புற்றுநோய்

இப்படி நுரையீரல் புற்றுநோய் உட்பட ஒவ்வொன்றுக்கும் பிரத்யேக டெஸ்ட் உண்டு. மலக்குடலில் புற்றுநோய் அறிகுறிகள் தென்பட்டால் அது அவர்களுக்கு பரம்பரையாகத் தொடர்கிறதா என்று பார்க்க வேண்டும். அவர்கள் கொலோனோஸ்கோப்பி (Colonoscopy) என்ற டெஸ்ட் செய்துபார்த்து புற்றுநோயை உறுதி செய்யலாம். அறிகுறிகளோ, சந்தேகங்களோ இருந்தால் இப்படி அந்தந்த உறுப்புக்கான பிரத்யேக டெஸ்ட் மூலம்தான் புற்றுநோயை உறுதி செய்ய முடியுமே தவிர, பொதுவாக எந்த முடிவுக்கும் வர முடியாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: புற்றுநோய் பாதிப்பைக் கண்டுபிடிக்க என்ன வழி?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top