Doctor Vikatan: பூண்டும், மீன் எண்ணெய் மாத்திரைகளும் இதயத்தைக் காக்குமா?

0

Doctor Vikatan: பூண்டு மற்றும் மீன் எண்ணெய் மாத்திரைகள் பயன்படுத்தினால் இதய பாதிப்பு குறையும் என்பது உண்மையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

பூண்டும் மீன் எண்ணெய் மாத்திரைகளும் இதயத்துக்கு நல்லது செய்யுமா என்றால் செய்யும். கொழுப்பு சேராமல் தடுக்கும். இவற்றிலுள்ள உயிர்சத்துகள், ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம் இதயநலன் காக்கும். ஆனால் இவற்றை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டால் நிச்சயம் கூடாது.

நம் மூதாதையர்கள் மிக அழகான ஒரு வாசகத்தை விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதாவது `விருந்தும் மருந்தும் மூன்று நாள்களுக்கு' என்பதே அது. மூன்று நாள்கள் என்பது பழமொழிக்காகச் சொல்லப்பட்டது என்றாலும் எந்த மருந்தையும் யாரும் அவசியமின்றி எடுக்கக்கூடாது.

மருந்துகளின் எதிர்வினை பற்றியும், அதிக அளவு மருந்துகள் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் அதிகம் பேசுகிறோம். மீன் எண்ணெயில் வைட்டமின் ஈ சத்தும், பூண்டில் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையும் இருப்பது உண்மைதான். ஆனாலும் வைட்டமின் சத்தும்கூட அளவு தாண்டும்போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

உதாரணத்துக்கு ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் தேவையே இல்லாமல் வைட்டமின் சத்துகளை அதிகம் எடுத்துக்கொள்வதால், அவருக்குப் பிறக்கும் குழந்தை குறைபாடுகளுடன் இருக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இதயம்

தேவையே இல்லாமல் மருந்துகளையும் சத்து மாத்திரைகளையும் எடுக்கும் பழக்கம், ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரம் போல நம் சமுதாயத்தில் பரவி வருகிறது. `நான் ஒமேகா 3 சப்ளிமென்ட் எடுக்கிறேன், வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் எடுக்கிறேன்...' என்றெல்லாம் சொல்லிக்கொள்வதை பெருமையாக நினைக்கிறார்கள்.

துரித உணவுகள் சாப்பிடப் பழகும்போது முதலில் சில நாள்களுக்கு அவற்றின் சுவை பிரமாதமாக இருப்பது போல தெரியும். போகப்போக அவற்றின் பக்க விளைவுகள் உடலில் பிரச்னைகளை ஏற்படுத்தும்போதுதான் அந்த உணவுகளின் ஆபத்து தெரிய வரும். அப்படித்தான் மருந்துகளும்.

தேவையில்லாமல் எடுக்கப்படும் எந்த மருந்தும் ஆபத்தானதே. அது கல்லீரலையோ, சிறுநீரகங்களையோ பாதிக்கக்கூடும். பூண்டு நல்லது என்பதற்காக அதை தேவையின்றி அதிகம் எடுக்கக்கூடாது. ரசத்திலோ, வேறு சமையலிலோ சேர்த்துச் சாப்பிடுவதில் பிரச்னையில்லை. அது தவிர்த்து பச்சையாகவோ, அளவுக்கதிகமாகவோ அதைச் சாப்பிடுவது அறிவுபூர்வமானதல்ல.

ஒருவருடைய இதயம் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்திலும், கொழுப்பு இல்லாமல் இருக்கும் பட்சத்திலும் அவர் ஏன் தேவையின்றி பூண்டையும் மீன் எண்ணெய் மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்? ஒருவேளை அந்த நபருக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் பட்சத்தில் இவையெல்லாம் அதை மேலும் குறையச் செய்யுமல்லவா?

பூண்டு

எனவே அவசியமிருந்தால் மட்டுமே மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தெளிவு ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். சத்து மாத்திரைகளே என்றாலும் தேவையின்றி எடுப்பதும் அளவுக்கு அதிகமாக எடுப்பதும் அறிவுறுத்தத்தக்கதே அல்ல. அவை நன்மை செய்வதற்கு பதில் கெடுதலே செய்யும் என்பதை நினைவில் கொள்ளவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: பூண்டும், மீன் எண்ணெய் மாத்திரைகளும் இதயத்தைக் காக்குமா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top