`பிரபலமடைவதன் மூலம்...' - 12 மணி நேர அமலாக்கத்துறை விசாரணை குறித்து விஜய் தேவரகொண்டா விளக்கம்

0

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, கடந்த 2011-ம் ஆண்டு நுவ்விலா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் போன்ற படங்களின் மூலம் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமடைந்தார். இந்த நிலையில், பிரபல இயக்குநரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவான லைகர் திரைப்படம், கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி வெளியானது. அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடித்து, பெரும் பொருள்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த படம், எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.

விஜய் தேவரகொண்டா

இந்த படத் தயாரிப்புக்கு 125 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக செய்யப்பட்ட முதலீட்டில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இந்த பட தயாரிப்புக்காக ஹவாலாப் பணம் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையை மேற்கொண்டது. படத்தின் தயாரிப்பாளரான ஷர்மி, இயக்குநர் பூரி ஜெகன் நாத் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தேவரகொண்டாவிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார். காலை 8 மணி அளவில் ஹைதராபாத் அமலாக்க இயக்குநரகத்தில் தொடங்கிய விசாரணை, இரவு 8.30 மணி வரை தொடர்ந்தது.

விஜய் தேவரகொண்டா

12 மணி நேர விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஜய் தேவரகொண்டா, "பிரபலமடைவதன் மூலம் சில அசௌகரிய நிலைகளும் ஏற்படுகின்றன. இதுவும் எனக்கு ஒரு அனுபவம். இதுதான் வாழ்க்கை. அமலாக்கத்துறையிடமிருந்து விசாரணைக்கு அழைக்கப்பட்டேன். அதனால் நான் ஆஜராகி என் கடமையை செய்தேன். அவர்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்திருக்கிறேன். அவர்கள் மீண்டும் என்னை அழைக்க மாட்டார்கள்" என விளக்கமளித்திருக்கிறார்.


மேலும் படிக்க `பிரபலமடைவதன் மூலம்...' - 12 மணி நேர அமலாக்கத்துறை விசாரணை குறித்து விஜய் தேவரகொண்டா விளக்கம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top