கால்பந்து உலகக்கோப்பை: கத்தார் மைதானங்களை சுற்றும் சர்ச்சை... 37 மரணங்களா... 6,000+ மரணங்களா?!

0

கத்தார் கால்பந்து உலகக்கோப்பை:

கத்தாரில் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைத் தொடர் (FIFA World Cup Qatar 2022), நவம்பர் 20-ம் தேதி தொடங்கி டிசம்பர் 18-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த தொடரை நடத்துவதற்கான உரிமையை கத்தார் நாடு கடந்த 2010-ம் ஆண்டு பெற்றது. நடைபெறும் போட்டியில் மொத்தம் 34 நாடுகள் பங்கேற்கவுள்ளன. இந்த போட்டியைக் காண உலகின் பல பகுதிகளிலிருந்தும், கோடிக்கணக்கான ரசிகர்கள் கத்தார் நாட்டுக்கு வருகை புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

கால்பந்து போட்டி

உலகக்கோப்பைக்கு அனுமதி பெற்ற பிறகு கத்தாரில் புதிய கால்பந்து மைதானம், விமான நிலையங்கள், அதிநவீன விடுதிகள், மெட்ரோ போக்குவரத்து, சாலை என்று இந்த தொடருக்கு மட்டுமே அந்த நாடு 220 பில்லியன் அமெரிக்கன் டாலர் செலவு செய்துள்ளது. இது இந்திய மதிப்புக்கு 17 லட்சம் கோடி ரூபாய் ஆகும். கடந்த காலங்களில் மற்ற நாடுகள் உலகக்கோப்பை தொடரை நடத்தச் செலவு செய்ததை விட இந்த தொகை மிகவும் அதிகமாகவும். உதாரணமாக 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற தொடரின் போது 11.6 பில்லியன் டாலர் செலவானதாகத் தரவுகள் கூறுகின்றன.

சர்ச்சைகள்:

சுவிட்சர்லாந்துக்குப் பிறகு கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடத்தும் அடுத்த சிறிய நாடு கத்தார்தான். உலகக்கோப்பையை நடத்த உரிமை பெற்ற சமயத்திலேயே அதிகாரிகளுக்கு 3 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்து ஏலத்தில் அனுமதி பெற்றதாகச் சர்ச்சை கிளம்பியது. கத்தார் உலகக்கோப்பை தொடர் நடத்த அனுமதி பெற்றது முதல் போட்டி தொடங்கியது வரை பல்வேறு சர்ச்சைகள் சுழன்றுகொண்டே இருக்கிறது. குறிப்பாகக் கால்பந்து மைதானம் அமைக்கும் பணியில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்ததாகச் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

கால்பந்து போட்டி

இந்த உலகக்கோப்பைக்காக ஒரு புதிய நகரத்தையே அந்த நாடு உருவாக்கவேண்டிய தேவை இருந்தது. இந்த பணியில், பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டார்வர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தார்கள். குறிப்பாக, இந்தியா, வங்காளதேசம், நேபாளம், ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். தி கார்டியன் இதழின் அறிக்கையின்படி, 2010-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை, 6,500-க்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உலகக்கோப்பை தொடர்பான பணிகளில் உயிரிழந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அதிக வெப்பம்...

கத்தாரில் 40-50 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும், அதன் காரணமாகவே குளிர் காலத்தில் இந்த தொடர் நடைபெறுகிறது. அதிகமான வெப்ப நிலையில் தொடர்ந்து 12 மணிநேரம் வேலை பார்ப்பது. அங்குள்ள மணல் தூசி போன்ற பல்வேறு காரணங்களினால் நல்ல ஆரோக்கியமாக இருந்தவர்கள் கூட உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில், பலரும் மாரடைப்பு வந்து சுருண்டு விழுந்து உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. தி கார்டியன் இதழின் அறிக்கையின் படி மொத்தம் 6,700-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கால்பந்து மைதானம்

அதில் கிட்டத்தட்ட, இந்தியாவைச் சேர்ந்த 2,700 பேர், நேபாளத்தைச் சேர்ந்த 1,600 பேர், பாகிஸ்தானைச் சேர்ந்த 824 பேர், இலங்கையைச் சேர்ந்த 557 பேர் என்று கூறப்பட்டுள்ளது. அதிலும், உலகக்கோப்பை மைதானம் கட்டும் இடத்தில் மட்டுமே பல மரணங்கள் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. நிகழ்ந்த பல மரணங்கள் இயற்கையான மரணம் என்றே பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதே சமயத்தில், அப்படி உயிரிழந்த பல தொழிலாளர்களுக்கும் அந்த நிறுவனத்திடமிருந்து எந்த இழப்பீடும் கிடைக்கப்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து மைதானம் அமைக்க பணியாற்றிய ஊழியர்கள் புகைப்படம்

கத்தார் சார்ப்பில், வேலை தொடர்பாக 3 இறப்புகளும், வேலைக்குச் சம்பந்தம் இல்லாத 37 இறப்புகளும் நடந்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், 6,500-க்கும் மேற்பட்ட மரணங்கள் நடந்திருப்பதாக தி கார்டியனின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கத்தார் சார்பில் இதுவரை, இந்த சம்பவம் குறித்து எந்த தெளிவான விளக்கமும் வழங்கப்படவில்லை. நிகழ்ந்த மரணங்கள் அனைத்துமே இயற்கையான மரணம் என்று மட்டுமே கூறப்பட்டுவருகிறது.


மேலும் படிக்க கால்பந்து உலகக்கோப்பை: கத்தார் மைதானங்களை சுற்றும் சர்ச்சை... 37 மரணங்களா... 6,000+ மரணங்களா?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top