ராணுவத்தில் பணி, 4 மாத சம்பளமும் வந்தது; ஆனால்... நூதன மோசடி! - ராணுவ வீரரை தேடும் போலீஸ்

0

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் என்ற இளைஞர் கடந்த 2019-ம் ஆண்டு, ராணுவத்தில் இணைய, ராணுவ ஆட்சேர்ப்பு முகாமுக்கு சென்றிருக்கிறார். அங்கு ராகுல் சிங் என்ற நபர் அறிமுகமாகியிருக்கிறார். இந்த முகாமில் மனோஜ் குமார் தேர்வாகவில்லை. ஆனால், ராகுல் சிங் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இந்த நிலையில், இருவருக்குமான தொடர்பு தொடர்ந்திருக்கிறது.

ராணுவ வீரர்கள்

அதைத் தொடர்ந்து, மனோஜ் குமாரிடம், "ராணுவத்தில் எனக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது, உன்னையும் ராணுவத்தில் சேர்த்து விட முடியும், ஆனால், அதற்கு 8 லட்சம் வரை பணம் தேவைப்படும். எனவே பணத்தை தயார் செய்துக்கொண்டு என்னிடம் வா வேலை வாங்கு தருகிறேன்" என ராகுல் சிங் தெரிவித்திருக்கிறார். அதை நம்பிய மனோஜ் குமார் 8 லட்சம் ரூபாயை ராகுல் சிங்கிடம் கொடுத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, உடல் பரிசோதனைக்கு வர வேண்டும் எனக் கூறி மனோஜ் குமாரை வர வைத்த ராகுல் சிங், உயர் அதிகாரி தோற்றத்தில் பிட்டு என்ற நபரை நடிக்க வைத்து மனோஜ் குமாரை நம்ப வைத்திருக்கிறார்.

அந்த சோதனையில், உடற் பயிற்சி சோதனைகள் செய்வது போல இருவரும் நடித்திருக்கிறார்கள். மேலும், அதில் மனோஜ் குமார் தேர்வாகிவிட்டதாகவும், அவருக்கு பணி நியமன ஆணை, அடையாள அட்டை, ராணுவ உடை, துப்பாக்கி என சகலமும் வழங்கி, பஞ்சாபின் பதன்கோட்டில் உள்ள ராணுவ முகாம் பகுதிக்கு அருகில் ராணுவ பாதுகாவலராக நிற்க வைத்திருக்கிறார்கள். மேலும், அவருக்கு கடந்த 4 மாதங்களாக ரூ.12,500 சம்பளமும் வழங்கியிருக்கிறார்கள்.

ராணுவம்

இந்த நிலையில், கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக ராகுல் சிங் ராணுவத்தில் இருந்து விலகினார். இதற்கிடையில், மனோஜ் குமாருக்கு முகாமில் இருக்கும் உண்மையான ராணுவ வீரர்களுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகே மனோஜ் குமாரின் அடையாள அட்டை முதல் அனைத்து ஆவணங்களும் போலி எனத் தெரியவந்திருக்கிறது. உடனே, ராணுவ வீரர்கள் மனோஜ் குமார் தொடர்பான தகவலை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து விசாரிக்கப்பட்டதில், அவர் ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்பது உறுதியானது.

அதன் பிறகு மனோஜ் குமார் மீண்டும் உத்தரப்பிரதேசத்துக்கே அனுப்பட்டார். ராகுல் சிங், பிட்டு உள்ளிட்டவர்கள் மீது வழக்கு மோசடி வழக்கு பதியப்பட்டு, பிட்டு, அவர்களுக்கு உதவியாக இருந்த ராஜா சிங் ஆகியோரை கைது செய்திருக்கிறது. முக்கிய குற்றவாளியான ராகுல் சிங் தலைமறைவாகியிருக்கிறார். காவல்துறை அவரையும் தேடி வருகிறது.

காவல்துறை

நாட்டை பாதுகாக்கும் உயரிய பொருப்பான ராணுவத்தில் சேருவதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டுமா...? ராணுவத்தில் சேர்வதற்காக பணம் கொடுத்து ஏமாறும் பல இளைஞர்கள் இந்த நாட்டின் தொடர் கதையாகிவருவது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.


மேலும் படிக்க ராணுவத்தில் பணி, 4 மாத சம்பளமும் வந்தது; ஆனால்... நூதன மோசடி! - ராணுவ வீரரை தேடும் போலீஸ்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top