நெல்லை: கொலையானவர் உடலை வாங்க மறுத்து 5-வது நாளாக தொடரும் போராட்டம்... பதற்றத்தில் மக்கள்!

0

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் கடந்த 10-ம் தேதி மர்ம நபர்களால் வழிமறித்து கொலை செய்யப்பட்டார். அங்குள்ள சுடலைமாடசாமி கோயிலை நிர்வகிப்பது தொடர்பாக மற்றொரு சமூகத்தினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோயில் பூசாரி சிதம்பரம் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்துள்ளது எனக் கூறப்படுகிறது. அதனால் மாயாண்டி உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சாலை மறியல்

பூசாரி சிதம்பரம் கொலை வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் ஆர்வம் காட்டியதன் காரணமாக மாயாண்டி கொல்லப்பட்டதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அதனால் கோயில் விவகாரம் தொடர்பாக தொடந்து நடந்துவரும் கொலைச் சம்பவங்களைத் தடுக்க போலீஸார் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கை.

கொலையான பூசாரி சிதம்பரம் மற்றும் மாயாண்டி ஆகியோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் நிவாரண உதவிகளும் அரசு சார்பில் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக கடந்த 5 நாள்களாக போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. அத்துடன், மாயாண்டி உடலை வாங்கவும் உறவினர்கள் மறுத்து வருகிறார்கள்.

ஆட்சியர் அலுவலக வாயிலில் மாயாண்டி உறவினர்கள்

இது தொடர்பாக ஆர்.டி.ஓ சந்திரசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மாயாண்டி குடும்பத்தினரும் அவர் சார்ந்த சமூகத்தினரும் முற்றுகையிட்டனர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உயிரிழந்த மாயாண்டியின் உறவினர்கள் மற்றும் சமுதாய அமைப்பினருடன் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு குடும்பத்திலும் தலா ஒருவருக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்க ஒப்புதல் அளித்தார். ஆனால், சிதம்பரம் மற்றும் மாயாண்டி குடும்பத்தினர் நிரந்தர வேலை கேட்டதால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை,.

போராட்டத்தில் ஈடுபட்ட சமுதாய அமைப்பினர்

இந்த நிலையில், இன்றும் மாவட்ட ஆட்சியத் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக சமுதாய அமைப்பினர் அறிவித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. அதனால் காலையிலேயே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள், இளைஞர்கள் மீது வழக்கு தொடரப்பட்டால் அவர்கள் அரசு மற்றும் தனியார் வேலைக்குச் செல்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால் போராட்டம் நடத்தவோ அதில் பங்கேற்கவோ வேண்டாம் என மாநகர காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாயாண்டி கொலையில் தொடர்புடைய 13 பேர் இதுவரை கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க நெல்லை: கொலையானவர் உடலை வாங்க மறுத்து 5-வது நாளாக தொடரும் போராட்டம்... பதற்றத்தில் மக்கள்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top