கேரளா: இடுக்கி மாவட்டத்தில் கனமழை; நிலச்சரிவில் சிக்கி உருக்குலைந்த வேன் - போக்குவரத்துக்குத் தடை!

0

கேரள மாநிலத்தில் தொடர்மழை பெய்துவரும் நிலையில், இடுக்கி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட், கொல்லம், கோட்டயம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு யெல்லோ அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

உருக்குலைந்த வேன்

இந்த நிலையில், நேற்று இடுக்கி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் தொடர்மழை பெய்தது. மூணாறு, குண்டளை, எல்லப்பட்டி, டாப் ஸ்டேஷன், வட்டவடை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதில் குண்டளை எஸ்டேட் புதுக்கடி பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் உருவாகி மரங்கள், பாறைகள், சகதியும் சேறுமாக மேடான பகுதிகளை கரைந்து தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளை மூழ்கடித்தன. 

வாரவிடுமுறை நாள்கள் என்பாதல் சுற்றுலாப் பயணிகள் மூணாறு, டாப் ஸ்டேஷன், வட்டவடை உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகமாக வந்திருந்தனர். இதில் டாப் ஸ்டேஸனிலிருந்து மூணாறு திரும்பிய கோழிக்கோடைச் சேர்ந்த சுற்றுலா வேன் வந்துகொண்டிருந்தது. அபாயத்தை உணர்ந்த டிரைவர் வேனை நிறுத்திவிட்டு பயணிகளை வெளியேறுமாறு கூற, குழந்தைகள் உட்பட 11 பேர் கீழே இறங்கி பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்ந்தனர். சிலர் வேன் சேதமடைந்துவிடக் கூடாது என்பதற்காக தள்ளிக்கொண்டிருந்தனர். அப்போது ரூபேஸ் என்பவர் வேனில் உள்ள செல்போனை எடுக்கச் சென்றபோது காட்டாற்று வெள்ளம் அதிகரித்தது. இதில் வேன் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு ஒரு கிலோ மீட்டர் வரை சென்றதில் உருக்குலைந்தது. மேலும் வேனில் இருந்த ரூபேஸ் மாயமானார். அவரை மூணாறு தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். 

வேன்

இதேபோல எல்லப்பட்டி எஸ்டேட் பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் தொடர்மழை காரணமாக சாலைகளில் மரங்கள் விழுந்தும், வெள்ளமும் சென்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் மூணாறுக்குச் செல்ல முடியாமலும், மூணாறிலிருந்து டாப் ஸ்டேஷன் எல்லப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு வர முடியாலும் இடையே சிக்கித்தவித்தனர். தொடர்ச்சியாக சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடந்ததால் அவர்கள் நீண்டநேர காத்திருப்புக்குப் பிறகு பாதுகாப்பாக அனுப்பப்பட்டனர். 

வேன்

இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகாவில் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மறுஉத்தரவு வரும்வரை இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை அத்தியாவசிய வாகனங்கள் தவிர அனைத்து வாகனங்களுக்கும் போக்குவரத்து தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் மூணாறு- வட்டவடை இடையே மறுஉத்தரவு வரும்வரை போக்குவரத்து தடைவிதித்து இடுக்கி மாவட்ட கலெக்டர் சீபாஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். 


மேலும் படிக்க கேரளா: இடுக்கி மாவட்டத்தில் கனமழை; நிலச்சரிவில் சிக்கி உருக்குலைந்த வேன் - போக்குவரத்துக்குத் தடை!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top