``இந்தியை புரிந்து கொள்ள முடியும்; மொழி பெயர்க்கவேண்டாம்" - ராகுல் காந்தியை இடைமறித்த நபர்

0

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை தற்காலிகமாக இரண்டு நாள்கள் நிறுத்திவிட்டு குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு பிரசாரம் செய்து வருகிறார். நேற்று இரண்டு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்ற்றினார். சூரத் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள் நிறைந்த மஹுவா என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி இந்தியில் பேசியதை ஒருவர் குஜராத்தியில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார். அந்நேரம் கூட்டத்தில் இருந்து ஒருவர் எழுந்து இந்தியில் தொடர்ந்து பேசும்படியும், எங்களால் இந்தியை புரிந்து கொள்ள முடியும் என்றும், மொழிப்பெயர்ப்பாளர் தேவையில்லை என்று தெரிவித்தார். உடனே முன் வரிசையில் இருப்பவர்களை பார்த்து இந்தி உங்களுக்கு ஓகேவா என்று கேட்டார். உடனே அவர்கள் சம்மதம் என்று கோஷமிட்டனர்.

உடனே ராகுல் காந்தி குஜராத்தி மொழிப்பெயர்ப்பாளர் இல்லாமல் இந்தியில் தொடர்ந்து பேசினார். ``பழங்குடியின மக்கள் தான் நாட்டின் முதல் உரிமையாளர்கள். அவர்களின் உரிமையை பறிக்க பாஜக முயற்சி செய்கிறது. உங்களை அவர்கள் வனவாசி என்று கூறுகின்றனர். உங்களை இந்தியாவின் முதல் உரிமையாளர் என்று சொல்லவில்லை. நீங்கள் நகரங்களில் வாழவேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை. உங்கள் குழந்தைகள் டாக்டராகவோ, பொறியாளராகவோ அல்லது விமான பைலட்டாகவோ வரவேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

குஜராத்தை முற்றுகையிட்ட பாஜக தலைவர்கள்

பாஜக தலைவர்கள் குஜராத் தேர்தலுக்காக அம்மாநிலத்தை முற்றுகையிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி ஒரே நாளில் சுரேந்திர நகர், நவ்சாரி, ஜாம்புஜார் ஆகிய இடங்களில் மூன்று பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நான்கு கூட்டங்களில் பங்கேற்றார். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் நேற்று இரவு பிரசார கூட்டங்களில் உரையாற்றினார். ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் தெருக்களில் ஊர்வலமாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். இது தவிர பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். ராகுல் காந்தி ராஜ்கோட் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றினார். குஜராத்தின் தென் பக்தி மற்றும் சவுராஷ்டிராவில் உள்ள 89 தொகுதிகளுக்கு வரும் ஒன்றாம் தேதி முதல் கட்டத்தேர்தல் நடக்கிறது. குஜராத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மும்முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் குதித்திருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி இலவசங்களை கூறி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது.


மேலும் படிக்க ``இந்தியை புரிந்து கொள்ள முடியும்; மொழி பெயர்க்கவேண்டாம்" - ராகுல் காந்தியை இடைமறித்த நபர்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top