``நடந்தது நகர சபையா, இல்லை திமுக-வின் நாடக சபையா?" - கேள்வி எழுப்பும் ம.நீ.ம

0

கிராம சபைக் கூட்டங்கள் வாயிலாக பல்வேறு மக்கள் பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்பட்டு வருகின்றன. கிராம சபை போல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தவும், மக்களின் குறைகளைக் கேட்டறியவும் நகர சபையை அமைக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. மேலும், இது தொடர்பாக கடந்த 21.2.2022 அன்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் முதன்முறையாக மாநகர சபைக் கூட்டம் நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினத்தில் நடந்து முடிந்தது.

நகர சபைக் கூட்டம்

இந்த நிலையில், கட்சிக் கூட்டங்கள் போல் நகராட்சி சபை நடந்ததாக மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,``நகரசபைக் கூட்டங்கள் அரசு நிர்வாகத்தில் மக்களின் பங்களிப்பை அதிகப்படுத்தி, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும்.

ஆனால் நடந்தது என்ன? தலைநகரான சென்னையில் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. கூட்டங்கள் நடத்தப்பட்ட பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க-வின் கட்சிக்கூட்டங்கள் போலவே நடத்தப்பட்டது. தாம்பரம் மாநகராட்சியில் அமைச்சர் நேரு, எம்.பி. டி.ஆர்.பாலு முன்னிலையில் பள்ளி மாணவரால் தி.மு.க தலைவரின் கவிதை வாசிக்கப்பட்டு அனைவரும் அதை ரசித்துக் கேட்டு மகிழ்ந்தனர்! இது நகரசபையா, இல்லை தி.மு.க-வின் நாடகசபையா?

மக்கள் நீதி மய்யம்

வார்டு கவுன்சிலர் தலைமையேற்று நடத்தவேண்டும் என்ற விதிமுறை அப்பட்டமாக காற்றில் பறக்கவிடப்பட்டது. அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் தலைமையில் “குறைதீர் கூட்டங்கள்” போலவே இந்தக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. நிதிநிலை அறிக்கை பெரும்பாலான இடங்களில் வாசிக்கப்படவில்லை. தீர்மானங்கள் முறையாக இயற்றப்படவில்லை என்பது போன்ற பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும், 12 ஆண்டுகளுக்குப் பிறகு நகரங்களில் இதுபோன்ற மக்கள் பங்கேற்கும் கூட்டங்கள் நடைபெறத் தொடங்கி இருப்பது பாராட்டுக்கும், வரவேற்புக்கும் உரியதே.

அடுத்தடுத்த கூட்டங்களில் விதிமுறைகளின்படி இந்தக்கூட்டங்கள் நடத்தப்படவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. மக்களை அதிகாரப்படுத்தும் கிராம சபை, நகர சபை போன்ற எல்லா வழிமுறைகளுக்கும் ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


மேலும் படிக்க ``நடந்தது நகர சபையா, இல்லை திமுக-வின் நாடக சபையா?" - கேள்வி எழுப்பும் ம.நீ.ம
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top