`பீஸ்ட், எதற்கும் துணிந்தவன் - சினிமா டம்மி துப்பாக்கிகளுக்கும் இனி லைசென்ஸ்!'- நீதிமன்றம் அதிரடி

0

சினிமாவில் பயன்படுத்தப்பட்டு வரும் டம்மி துப்பாக்கிகளுக்கு காவல்துறையினர் அதற்குரிய லைசென்ஸ் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கோடம்பாக்கத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பு சென்னை கோயம்பேடு பகுதியில் நடந்தது. அந்தப் படப்பிடிப்பில் ஏ.கே.47 டம்மி துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அந்த வகை துப்பாக்கிகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெறவில்லை என்று கூறி கோயம்பேடு போலீஸார் அவற்றைப் பறிமுதல் செய்தனர். "இதுபோல் டம்மி துப்பாக்கி வைத்திருப்பவர்கள் முறையாக அனுமதி பெற வேண்டும்" என்று தெரிவித்திருந்தனர்.

'எதற்கும் துணிந்தவன்' படத்திற்கு டம்மி துப்பாக்கிகள் சப்ளை செய்தவர் செல்வராஜ். சினிமா வட்டாரத்தில் அவரை 'கன்' செல்வராஜ் என்றே அழைப்பார்கள். தனது டம்மி ஆயுதங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டதும், உடனே அவரது சங்கத்தில் இது குறித்துத் தெரிவித்தார்.

எதற்கும் துணிந்தவன்

இதனைத் தொடர்ந்து 'தென்னிந்தியத் திரைப்பட டம்பி எஃபெக்ட்ஸ் சங்கம்' (South Indian Movies Dummy Effects Association (SIMDEA)) மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், "மகாராஷ்டிர மாநிலத்தில் படப்பிடிப்புக்குப் பயன்படுத்தப்படும் டம்மி ஆயுதங்களுக்கு எண் வழங்கப்பட்டு, உரிமம் வழங்கப்படுகிறது. அந்த மாநில நீதிமன்றம் உத்தரவின்படி போலீஸார் அவ்வாறு செய்துள்ளனர். இதனால், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு டம்மி துப்பாக்கிகளைக் கொண்டு செல்வது எளிதாகிறது. அதுபோல, தமிழ்நாட்டிலும் டம்மி துப்பாக்கிகளுக்கு எண் வழங்கி, உரிமம் வழங்க டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி, "மனுதாரர்கள் வைத்திருக்கும் டம்மி ஆயுதங்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால் சம்பந்தப்பட்ட உதவி போலீஸ் கமிஷனர் மனுதாரர் இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அதன்பிறகு ஆயுதங்களுக்குச் சான்றிதழ் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

இது குறித்து 'கன்' செல்வராஜிடம் பேசினேன். இவர் தற்போது விஜய்யின் 'பீஸ்ட்' உட்படப் பல படங்களுக்கு டம்மி ஆயுதங்கள் தயார் செய்து கொடுத்திருக்கிறார்.

கன் செல்வராஜ்

"ஆரம்பத்துல டம்மி துப்பாக்கிகளுக்கு உரிமம் வேண்டும்னு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எங்க யூனியனும், தனிப்பட்ட முறையில் நானும் விண்ணப்பிச்சிருந்தோம். அப்படிக் கொடுக்க முடியாதுன்னு அவங்க தரப்பில் சொல்லிட்டாங்க. அப்புறம், 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பின்போது நடந்த அந்த விஷயம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். என்னோட 182 டம்மி துப்பாக்கிகளையும் போலீஸ் பறிமுதல் செய்ததோடு, அதைக் கொண்டு சென்றவரையும் போலீஸ் கைது பண்ணினாங்க. அப்புறம் எங்க யூனியன் சார்பில் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தோம். அந்த வழக்கு விசாரணை வந்து, இப்ப தீர்ப்பும் வந்திடுச்சு.

கோர்ட்டுல 'இது ஆயுதம் கிடையாது. பொம்மை துப்பாக்கிகள் தானே... இதை ஒழுங்கு முறைப்படுத்தலாமே'ன்னு சொன்னதோடு எங்க இடத்துக்கு வந்து ஆய்வு செய்து லைசென்ஸ் வழங்கணும்ன்னு உத்தரவிட்டிருக்காங்க. டம்மி கன்களுக்கு லைசென்ஸ் வழங்கணும்னு மும்பைக்கு அடுத்து சென்னையில்தான் இப்படி உத்தரவிட்டிருக்காங்க. என்னுடைய 182 டம்மி துப்பாக்கிகளும் இன்னமும் நீதிமன்றத்துலதான் இருக்கு. அவற்றை எல்லாம் என்கிட்ட ஒப்படைக்க உத்தரவிட்டுட்டாங்க. சீக்கிரமே என் கைக்கு வந்துடும்." என்கிறார் 'கன்' செல்வராஜ்.


மேலும் படிக்க `பீஸ்ட், எதற்கும் துணிந்தவன் - சினிமா டம்மி துப்பாக்கிகளுக்கும் இனி லைசென்ஸ்!'- நீதிமன்றம் அதிரடி
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top