சிறு முதலீட்டாளர்களின் நலன் காப்பது முக்கியம்!

0

சமீப காலமாக, பங்குச் சந்தை முதலீட்டின் மீது சிறு முதலீட்டாளர்களுக்கு ஆர்வமும் ஈடுபாடும் அதிகரித்துவருவது ஆரோக்கியமான விஷயம். பணவீக்கத் தைத் தாண்டிய வருமானம், நினைத்த நேரத்தில் முதலீட்டைப் பணமாக்கும் வசதி எனப் பல அம்சங்கள் இதில் இருப்பதுடன், ஹர்ஷத் மேத்தா காலத்தில் நடந்ததுபோல எந்தப் பெரிய தவறும் இந்த முதலீடுகளில் நடக்காத படிக்குத் தேவையான விதிமுறைகளை மத்திய அரசாங்கம் அடிக்கடி மாற்றி வருவதும்தான் சிறு முதலீட்டாளர்கள் ஈடுபாட்டுக்கு முக்கியமான காரணங்களாகும்.

என்றாலும்கூட, இந்த முதலீடுகளிலும் அவ்வப்போது சில பிரச்னைகள் உருவாகி, சிறு முதலீட்டாளர்கள் நலன் கேள்விக்குள்ளாவது நடக்கவே செய்கிறது. உதாரணமாக, 24 பங்கு நிறுவனங்களின் புரொமோட்டர்கள் தங்களுக்குச் சொந்தமான 100% பங்குகளை அடமானம் வைத்திருக்கிறார்கள். தவிர, 78 நிறுவனங்களின் புரொமோட்டர்கள் 76% பங்குகளையும், 57 நிறுவனங்களின் புரொமோட்டர்கள் 57% பங்குகளையும் அடமானம் வைத்திருக்கின்றனர். மேலும், 10% முதல் 20% நிறுவனப் பங்குகளை அடமானம் வைத்த புரொமோட்டர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம்.

நிறுவனங்களின் புரொமோட்டர்கள் அவர்களுக்குச் சொந்தமான பங்குகளை அடமானம் வைப்பது அவர்களின் உரிமை என்பதை மறுப்பதற்கில்லை. அதே சமயம், புரொமோட்டர்கள் செய்யும் தொழிலையும், அவர்களின் தொழில் திறமையையும் நம்பி சிறு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்த பின்பு, அந்தத் தொழிலை நல்லவிதமாக நடத்தாமல், பங்குகளை அடமானம் வைப்பது, புரொமோட்டர்கள் தங்கள் கடமையில் இருந்து தவறுவதுதானே! இதைத் தடுக்க, ‘‘புரொமோட்டர்கள் 25 - 50 சதவிகிதத்துக்குமேல் தங்கள் நிறுவனப் பங்குகளை அடமானம் வைக்க வேண்டும் எனில், இயக்குநர் குழுவின் அனுமதியைப் பெற வேண்டும்’’ என என்.எஸ்.இ எக்ஸ்சேஞ்சின் முன்னாள் சி.இ.ஓ அஜய் தியாகி சொல்வது சரியான தீர்வாகும். இந்த யோசனையை செபி உடனடியாக பரிசீலனை செய்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே போல, பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய அஞ்சுபவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் முதலீடு செய்கின்றனர். ஆனால், சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நைகா, பி.பி ஃபின்டெக், பேடிஎம், டெலிவரி போன்ற சில ஸ்டார்ட்அப் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளன. இந்த நிறுவனப் பங்குகளின் விலை கணிசமான அளவில் குறைந்தாலும், இந்தப் பங்குகளை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் விற்று வெளியேறுகிற மாதிரி தெரியவில்லை. ‘‘சிறு முதலீட்டாளர்களின் பணத்தை இது மாதிரி நஷ்டம் தரும் பங்குகளில் வைத்திருப்பது சரியா?’’ என பங்குச் சந்தை நிபுணரான தெபாசிஸ் பாசு கேள்வி எழுப்பியிருப்பது நியாயமே. எனவே, இதைத் தடுக்கவும் செபி புதிய விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும்.

இந்தப் பிரச்னைகளை சரிசெய்வதன் மூலமே இன்னும் அதிக சிறு முதலீட் டாளர்களைப் பங்குச் சந்தை நோக்கி அழைத்து வர முடியும். இல்லாவிட்டால், மோசடித் திட்டங்களில் மக்கள் பணத்தை இழக்கும் நிலையே உருவாகும்!

- ஆசிரியர்


மேலும் படிக்க சிறு முதலீட்டாளர்களின் நலன் காப்பது முக்கியம்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top