`நீர் வளம் பெருக்கி, விவசாயம் காத்தவன்’ பொன்னியின் செல்வனுக்கு விவசாயி செய்த மரியாதை..!

0

ராஜராஜசோழனுக்கு கிபி 985 ஆம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் முடிசூட்டப்பட்டதை நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும் தஞ்சாவூரில் சதய விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு 1037 வது சதய விழாவை முன்னிட்டு, பெரிய கோவில், ராஜராஜ சோழன் சிலை ஆகியவை மலர்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டன.

ராஜராஜ சோழன் சதய விழாவில், அவரது சிலைக்கு பலரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் விவசாயி ஒருவர் தனது வயலில் விளைந்த நெல்லில் மாலை செய்து, அதை ராஜராஜ சோழன் சிலைக்கு அணிவித்து மரியாதை செய்தார். இந்த சம்பவம் பார்த்த அனைவரின் கவனத்தையும் பெற்றது.

நெல் மாலையில் ராஜராஜ சோழன்

சதய விழா அன்று காலை சுமார் எட்டு மணியளவில் பெரிய கோயில் அருகே உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. தருமபுர ஆதீனம் 27 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு முதலில் மாலை அணிவித்தார்.

அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், சதய விழா குழு, அரண்மனை தேவஸ்தானம் சார்பில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா, சதய விழா குழு தலைவர் செல்வம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே,எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தஞ்சாவூர் பெரியகோயில்

இதையடுத்து மோகன் என்ற விவசாயி, ராஜராஜ சோழன் சிலைக்கு அறுவடை செய்த நெற்கதிர்களை கொத்தாக வைத்து அதில் செய்த நெல் மாலையினை அணிவித்து மரியாதை செய்து வணங்கியது பலராலும் கவனிக்கப்பட்டது. இது குறித்து விவசாயி மோகனிடம் பேசினோம், "பாபநாசம் தாலுகா, மாரியம்மன் கோயில் அருகே உள்ள அருண்மொழிப் பேட்டை என்னோட சொந்த ஊர்.

சோழமன்னர்கள் நீர் நிலைக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்து ஆட்சி செய்தவர்கள். ஓடி வரும் நீரை ஒழுங்குப்படுத்தி தேக்கி வைத்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்துகின்ற வகையில் கரிகால சோழனால் கட்டப்பட்ட கல்லணை ஆயிரம் ஆண்டுகளை கடந்து, பாசன பரப்பான விளைநிலைங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு பெரும் ஆதாரமாக திகழ்கிறது. விவசாய வளத்தை பெருக்கிய பெருமைக்குரியவர்கள்.

நெல் மாலை

மாமன்னன் ராஜராஜ சோழன் ஏரி, குளங்களை வெட்டி நூற்றுகணக்கான நீர் நிலைகளை உருவாக்கியவர். மழை நீரின் அவசியத்தை உணர்ந்து அந்த காலத்திலேயே மழை நீர் சேகரிப்பு முறையினை அறிமுகப்படுத்தியவர். விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகளை ஊக்கப்படுத்தி உருவாக்கியவர். விவசாயிகளுக்கு உதவிகளை செய்து விளை நிலங்கள் மட்டுமின்றி அவர்களையும் செழிப்பாக மாற்றியவர் என ராஜராஜனின் சிறந்த ஆட்சி முறைக்கான காரணங்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.

பொன்னியின் செல்வன், ராஜராஜ சோழன் சதய விழாவில் என் வயலில் விளைந்த நெல் மணிகளை அவருக்கு படைக்க நினைத்தேன். அறுவடைக்கு தயாரான நெற்கதிர்களை அறுத்து கொத்தாக வைத்து மாலை செய்தேன். ஒரு மாதத்திற்கு முன்பாகவே மாலை ரெடியாவிட்டது. சதய விழாவான இன்று நெல் மாலையினை எடுத்து வந்து ராஜராஜ சோழனுக்கு அணிவித்த என்னை எல்லோரும் பாரட்டினார்கள். பொன்னியின் செல்வன் கழுத்தில் இருந்து என்னோட நெல் மணி மாலை மின்னியது எனக்குள் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியது" என்றார் நெகிழ்ச்சியுடன்.


மேலும் படிக்க `நீர் வளம் பெருக்கி, விவசாயம் காத்தவன்’ பொன்னியின் செல்வனுக்கு விவசாயி செய்த மரியாதை..!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top