``விவசாயி என்று சொன்னால் போதாது; உண்மையான விவசாயி முதல்வர்தான்"- அமைச்சர் செந்தில் பாலாஜி

0

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோயில் பகுதியில், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ``ஆட்சிபொறுப்பேற்ற ஓர் ஆண்டில், ஒரு லட்சம் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு வழங்கினோம். ஓராண்டு என்பதைவிட, ஆறே மாதத்தில் முதல்வரின் உத்தரவால், தமிழ்நாடு மின்சார வாரியம் ஒருலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி, சரித்திர சாதனை படைத்தது. இப்போது, 50,000 விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பை வழங்கிட வேண்டும் என்று உத்தரவிட்டு, அதனுடைய தொடக்க விழாவை இன்று கரூர் மாவட்டத்தில் நடக்கிறது. இந்த சிறப்புவாய்ந்த நிகழ்வில் 20,000 விவசாயிகளுக்கான உத்தரவை ஒரே அரங்கத்திலே வைத்து முதல்வர் திருக்கரங்களால் வழங்க இருக்கிறார்கள். முதல்வரின் வழிகாட்டுதல்படி, 100 நாள்களில் இந்த 50,000 விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு முழுவதுமாக வழங்கிட தமிழ்நாடு மின்சார வாரியம் முயற்சிசெய்துள்ளது. 20 வருஷம், 21 வருஷம் பதிவு செய்து காத்திருந்த விவசாயிகளுக்கெல்லாம் இதன்மூலம் இலவச மின் இணைப்பு கிடைக்க உள்ளது. அதை ஒரு விவசாயி நம்பாமல் ஆச்சர்யமாக கேட்டுள்ளார். அந்த வகையில் விவசாயிகளுக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில், இந்தாண்டு 50,000 விவசாயிகள், கடந்த ஆண்டு ஒரு லட்சம் விவசாயிகள் என இந்த இரண்டாண்டுகளில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலவச மின் இணைப்பு வழங்கும் விழா

இந்த இலவச மின் இணைப்பு என்பது, 'நானும் ஒரு விவசாயி' என்று வெறும் வார்த்தையில் சொன்னால் போதாது. உண்மையான விவசாயியாக இருந்திருந்தால், நாலரை லட்சம் விவசாயிகள் பதிவு செய்து 20 ஆண்டுக்கு மேலாக காத்திருந்தார்கள். கடந்த காலங்களில் மின்மிகை மாநிலமாக இருப்பதாக வெளியில் பறைசாற்றிக்கொண்டார்கள். ஆனால், மின்மிகை மாநிலம் என்று சொன்னால், நாலரை லட்சம் விவசாயிகள் ஏன் பதிவு செய்தும் காத்திருக்ககூடிய சூழல் ஏற்பட்டது.

கடுமையான நிதி நெருக்கடியிலும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதிநிலைமை மிக மோசமாக இருந்த சூழலிலும்கூட, தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றியே தீருவேன், பதிவு செய்து காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் படிப்படியாக இலவச மின் இணைப்பை வழங்கியே தீருவேன் என்று சொன்ன நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் தான் உண்மையான விவசாயி என்பதை இந்த அரங்கத்திலே, விவசாயிகளின் நலன் காக்கும் பாதுகாவலராக தன்னை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். விவசாயி என்பது வெறும் வார்த்தை அல்ல. செயலில் இருக்க வேண்டும். அந்த செயலை நமக்கு அரசின் உத்தரவாக தந்து, மின் இணைப்பை தந்திருக்கிற முதலமைச்சருக்கு நாமும், நம் குடும்பமும் வாழ்நாள் முழுக்க நன்றிகடன்பட்டவர்களாக இருக்க வேண்டும். இயங்குமா, இயங்காதா, செயல்படுத்த முடியுமா என்று கடந்த கால ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டினால் நலிவடைந்த நிலையில் இருந்த மின்சாரத்துறையை மாற்றிக்காட்டிய முதலமைச்சர், ஒருபக்கம் மின் உற்பத்திக்கான திட்டங்கள், அதை விநியோகம் செய்வதற்கான கட்டமைப்புகள் என பல விசயங்களை செய்துவருகிறார்.

முதல்வருக்கு பச்சைத்துண்டு போர்த்தும் செந்தில் பாலாஜி

அதற்காக, துணை மின்நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியம் இந்தியாவில் முதலிடம் பெறும் என்ற உறுதியினை இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல், கரூரில் தடுப்பணைகள், அரசு வேளாண் கல்லூரி, கலைக்கல்லூரி, கதவணைகள் என்று வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை ஆட்சிபொறுப்பேற்ற இந்த ஒன்றரை வருடங்களில் வழங்கியிருக்கிறார். நாடு சுதந்திரம் பெற்றபிறகு கரூர் மாவட்டத்துக்கு இந்த ஒன்றரை ஆண்டுகளில் கிடைத்த திட்டங்கள் போல் வேறு எப்போதும் கிடைக்கவில்லை" என்றார்.


மேலும் படிக்க ``விவசாயி என்று சொன்னால் போதாது; உண்மையான விவசாயி முதல்வர்தான்"- அமைச்சர் செந்தில் பாலாஜி
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top