`நடிகை பூனம், ஷெர்லினை ஆபாச படமெடுத்து வெளியிட்டார் ராஜ் குந்த்ரா!'- போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல்

0

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19-ம் தேதி ஆபாச வீடியோ எடுத்து ஒடிடி தளத்தில் விற்பனை செய்ததாக மும்பை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். அதே ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பை மத் தீவில் மாடல் அழகிகளைப் பயன்படுத்தி ஆபாச வீடியோ எடுத்தபோது போலீஸார் ரெய்டு நடத்தி தயாரிப்பாளர் யாஷ்மின் கான் உட்பட 5 பேரை கைதுசெய்து அவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். 5 மாதங்கள் தொடர்ந்த விசாரணையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவிற்கு ஆபாச படம் தயாரிப்பதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜ் குந்த்ரா கைதுசெய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவ்வழக்கில் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே மற்றும் ஷெர்லின் சோப்ராவிற்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. ராஜ் குந்த்ரா சொந்தமாக மொபைல் ஆப் உருவாக்கி அதில் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பூனம் பாண்டே

இந்நிலையில் வழக்கில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடத்தி வந்த போலீஸார் இதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில், ``தொழிலதிபர் ராஜ் குந்த்ரா, மாடல் ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டே, தயாரிப்பாளர் மீதா ஜுன்ஜுன்வாலா மற்றும் கேமராமென்கள் இணைந்து மும்பை புறநகர் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அறை எடுத்து ஆபாச வீடியோ தயாரித்து அதனை பல்வேறு ஒடிடி தளங்களில் வெளியிட்டுள்ளனர். மேலும், ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோ தயாரித்து விநியோகம் செய்வதில் முக்கிய பங்கு வகித்தார்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 450 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையில் ராஜ் குந்த்ரா, ராஜ் குந்த்ராவின் பணியாளர் உமேஷ் காமத், ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டே, கேமராமென் ராஜு துபே, ஜுன்ஜுன்வாலா, பனானா பிரைம் ஒடிடி தள இயக்குநர் சுவஜித் சவுத்ரி ஆகியோர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒடிடி தளத்தில் ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டேயின் ஆபாச வீடியோக்கள் இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. பனானா பிரைம் ஒடிடி இயக்குநர் சுவஜித், ஆபாச பகுதிகளை கொண்ட வெப் சீரியஸ்களை தயாரித்து தனது தளத்தில் வெளியிட்டு வந்துள்ளார். அதோடு பூனம் பாண்டே ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தனது ஆபாச வீடியோவை தயாரித்து அதனை ராஜ் குந்த்ராவின் கம்பெனியின் உதவியோடு தயாரித்த மொபைல் ஆப்களில் வெளியிட்டு வந்துள்ளார். மேலும் ஷெர்லின் சோப்ராவின் ஆபாச வீடியோவை கேமரா மென் ராஜு துபே படப்பிடிப்பு நடத்தி இருப்பதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஷெர்லின் சோப்ரா

எழுத்தாளர் மீதா ஜுன்ஜுன்வாலாவும், ராஜ் குந்த்ராவின் கம்பெனியும் ஆபாச வீடியோவிற்கு தேவையான கதைகளை உருவாக்க ஷெர்லின் சோப்ராவிற்கு உதவி செய்துள்ளனர். இதே போன்று பூனம் பாண்டேயும் ராஜ் குந்த்ராவின் ஆர்ம்ஸ் பிரைம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து 'தி பூனம் பாண்டே' என்ற மொபைல் ஆப் உருவாக்கி அதில் தனது ஆபாச வீடியோக்களை வெளியிட்டு இருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

``மாடல் மற்றும் நடிகைக்கு ஆபாச வீடியோ தயாரித்து ஒடிடி தளம், மொபைல் ஆப்களில் வெளியிட ராஜ் குந்த்ராவின் கம்பெனி கணிசமாக தொகையை கட்டணமாக வசூலித்திருக்கிறது.

ராஜ் குந்த்ரா

ஆபாச வீடியோவில் நடித்த சில நடிகைகள் காணாமல் போய்விட்டனர். அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். உமேஷ் காமத் லண்டனைச் சேர்ந்த ஹாட்ஷூட் என்ற நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வந்தார். ஹாட்ஷூட் நிறுவனம் ராஜ் குந்த்ராவுக்குச் சொந்தமானது. இந்த ஹாட்ஷூட் மொபைல் ஆப்பில்தான் ராஜ் குந்த்ரா அதிகமான ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வந்தார்" என்றும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க `நடிகை பூனம், ஷெர்லினை ஆபாச படமெடுத்து வெளியிட்டார் ராஜ் குந்த்ரா!'- போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top