சோமவார பிரதோஷ மகிமைகள்: கார்த்திகையில் இந்த இரண்டு நாள்களில் இதைச் செய்தால் கஷ்டங்கள் தீருமாம்!

0
கார்த்திகை மாதம் ஆன்மிகச் சிறப்புவாய்ந்த ஒன்று. இந்த மாதத்தில் சிவவழிபாடு மிக முக்கியமான ஒன்று. சிவபெருமான் அடிமுடி அறிய முடியாத அண்ணாமலையாக ஜோதி ஸ்வரூபமாக நின்ற காலம் கார்த்திகை மாதப் பௌர்ணமி. அந்த நாளில் நாம் வீடுகளிலும் கோயில்களிலும் விளக்குகள் ஏற்றி இறைவனை ஜோதிஸ்வரூபனாக தரிசனம் செய்கிறோம். அன்று மட்டுமல்ல கார்த்திகை மாதம் முழுவதுமே வீட்டு வாசலில் காலையும் மாலையும் விளக்கேற்றி வைக்கும் வழக்கம் உண்டு.

கார்த்திகை மாதத்தின் சிறப்புகளில் மிக முக்கியமானது கார்த்திகை சோமவார வழிபாடு. கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமைகளில் செய்யப்படும் வழிபாடு. சோமன் என்றால் சந்திரன். சந்திரனுக்குரிய கிழமை என்பதால் அது திங்கட்கிழமை என வழக்கப்படலாயிற்று. சந்திரன் மனோகாரகன். நம் மனத்தின் அதிபதி. சந்திரன் வளர்வதும் தேய்வதுமாக இருக்கும். அதுபோலவே மனித மனத்திலும் மகிழ்ச்சியும் துக்கமும் மாறிமாறிவரும். சிவபெருமான் பிறைச் சந்திரனைத் தன் சடையில் சூடியவர். அதன்மூலம் சந்திரனின் சாபத்தை மாற்றியவர்.

நந்தி தரிசனம்
அதேபோன்று நாமும் சிவபெருமானைச் சரண் அடைந்து சந்திர மௌலீஸ்வரராக அவரை வழிபட்டால் நம் மனதில் உள்ள துன்பங்கள் நீங்கி எப்போதும் இளமையும் மகிழ்ச்சியையும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. அதிலும் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளிலில் சிவ வழிபாடு செய்தால் வாழ்வில் சகல குறைகளும் நீங்கும் என்கிறார்கள்.

கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் நடைபெறும் வழிபாடுகளில் முக்கியமானது சிவபெருமானுக்குச் செய்யப்படும் சங்காபிஷேகம். 108 அல்லது 1008 சங்குகளில் தீர்த்தம் நிரப்பி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் மிகவும் புண்ணியம் என்கின்றன ஞானநூல்கள். பக்தர்கள் சங்காபிஷேகத்தை தரிசனம் செய்தாலே கடன் தொல்லைகள் நீங்கும். கஷ்டங்கள் விலகும் என்கிறார்கள். எனவே இந்த மாதத்தில் வரும் நான்கு திங்கட்கிழமைகளில் ஏதேனும் ஒரு திங்கட்கிழமையாவது சங்காபிஷேகம் நடைபெறும் சிவாலயத்துக்குச் சென்று சிவதரிசனம் செய்யுங்கள்.

பிரதோஷம்

சோகங்கள் தீர்க்கும் சோமவார பிரதோஷம்

இந்த மாதம் வரும் இரண்டு பிரதோஷ தினங்களும் திங்கட்கிழமைகளிலேயே வருகின்றன. எனவே இந்த மாத பிரதோஷ தினங்கள் சிறப்பு மிக்கவை என்று போற்றப்படுகின்றன. சோமவார பிரதோஷ தினத்தில் பிரதோஷ வேளையில் நந்தி தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு. பிரதோஷ வேளையில் நந்திக்குச் செய்யும் அபிஷேகத்தை தரிசனம் செய்து வேண்டிக்கொண்டால் நம் வாழ்வில் கஷ்டங்கள் எல்லாம் தீரும் என்கிறார்கள்.

நந்தி பகவானுக்குக் காப்பரிசி அல்லது வெல்லத்தில் செய்த ஏதேனும் ஒரு பிரசாதத்தை சிறிதளவேனும் நிவேதனம் செய்தால் நம் துன்பங்கள் நீங்கி இன்பம் பிறக்கும் என்பது நம்பிக்கை. எனவே தவறாமல் இன்றும் 5.12.2022 தினத்திலும் சிவபெருமானை பிரதோஷ நாளில் தரிசனம் செய்து நந்தி அபிஷேகத்தைக் கண்ணுற்று, காப்பரிசி நிவேதனம் செய்தால் நம் கஷ்டங்கள் தீரும், வாழில் நிம்மதி பிறக்கும் என்கிறார்கள் பெரியோர்கள்.

மேலும் படிக்க சோமவார பிரதோஷ மகிமைகள்: கார்த்திகையில் இந்த இரண்டு நாள்களில் இதைச் செய்தால் கஷ்டங்கள் தீருமாம்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top