Doctor Vikatan: கடலை, கிழங்கு உணவுகளால் வாயுத்தொல்லை வருவதைத் தடுக்க முடியுமா?

0

Doctor Vikatan: கிழங்கு மற்றும் சன்னா போன்ற உணவுகளை உட்கொண்டதும் வாயுத் தொந்தரவு வருவது ஏன்? வாயுத் தொந்தரவுக்கும் உணவுகளுக்கும் தொடர்புண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்

கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர்

சன்னா எனப்படும் கொண்டைக்கடலை, ராஜ்மா, கிழங்கு வகைகள் போன்றவற்றைச் சாப்பிடும்போது வாயுத்தொல்லை வருவதாக பலர் சொல்வதுண்டு. இவற்றைச் சமைக்கும் முறை என்பது முக்கியம். பச்சைப்பயறு, ராஜ்மா, சோயா, சன்னா என எந்தக் கடலை வகையானாலும் 6 முதல் 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அந்த நீரை வடித்துவிட்டு மீண்டும் தண்ணீர் ஊற்றி வேகவைத்துதான் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். இப்படிச் செய்தால்தான் வாயுத்தொல்லை ஏற்படுவது தடுக்கப்படும்.

அடுத்ததாக சமையலுக்கு நாம் பயன்படுத்துகிற மசாலா பொருள்களும் கவனிக்கப்பட வேண்டும். காலிஃபிளவர், முட்டைக்கோஸ், சேனைக்கிழங்கு, புரொக்கோலி, சேப்பங்கிழங்கு போன்றவற்றைச் சமைக்கும்போது நிறைய பூண்டு சேர்த்துச் சமைத்தால் வாயுத் தொந்தரவு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

சிலர் பருப்பு வகைகளில் புரதச்சத்து அதிகம் என்பதால் தினமும் கொண்டைக்கடலை, ராஜ்மா என ஏதோ ஒன்றை சாப்பிடுவார்கள். அதுவும் தவறு. வாரம் ஒருமுறையோ, பதினைந்து நாள்களுக்கொரு முறையோ சாப்பிட்டால் போதுமானது.

அசிடிட்டி பிரச்னை உள்ளவர்கள், அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் மேற்குறிப்பிட்ட உணவுகளைத் தவிர்ப்பதுதான் சிறந்தது. தவிர்க்க முடியாத பட்சத்தில் அளவு குறைவாகச் சாப்பிடலாம். ஒரே ஒரு கரண்டி அல்லது அரை கப் அளவோடு நிறுத்திக்கொள்ளலாம். வாயுத்தொல்லை வராமலிருக்க சீரகம் அல்லது ஓமம் சேர்த்த நீர் அருந்துவது, பெருங்காயம் சேர்த்த மோர் குடிப்பது போன்றவை உதவும். தவிர அவை செரிமானத்தைச் சீராக வைக்கவும் உதவும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு போன்றவற்றில் உள்ள நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் காரணமாகவே அது வாயுத்தொல்லையை ஏற்படுத்துகிறது. இத்தகைய உணவுகளை நாம் சாப்பிடும்போது நம் சிறுகுடலில் செரிமானமாகும்போது அவை நொதிக்க வைக்கப்படும். அந்நிலையில் வாயு உற்பத்தியாகிறது.

இத்தகைய உணவுகள் வாயுத்தொந்தரவைத் தருகின்றன என்றால் முடிந்தவரை அவற்றைத் தவிர்ப்பதும், நிறைய திரவ உணவுகள் சாப்பிடுவதும் அவசியம்.

உணவுகளை நன்கு மென்று சாப்பிட வேண்டியதும் மிகமிக முக்கியம். அவசரமாக விழுங்குவதும் வாயுத்தொந்தரவை ஏற்படுத்தும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: கடலை, கிழங்கு உணவுகளால் வாயுத்தொல்லை வருவதைத் தடுக்க முடியுமா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top