Doctor Vikatan: சோயா உணவுகளை எல்லோரும் சாப்பிடலாமா?

0

Doctor Vikatan: சோயா உணவுகள் எல்லோருக்கும் ஏற்றவையா? சோயாவை எப்படியெல்லாம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்? சோயா சங்க்ஸ் ஆரோக்கியமானதா?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

சோயா உணவுகள் எல்லோருக்கும் ஏற்றவைதான். 2 வயதுக்குப் பிறகிலிருந்து எல்லோருக்கும் சோயா உணவுகள் கொடுக்கலாம். தைராய்டு குறைவாகச் சுரக்கும் ஹைப்போ தைராய்டு பாதிப்பு உள்ளவர்களில் சிலருக்கு மட்டும் சோயா உணவுகள் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அதுவும் தினமும் 30 முதல் 40 கிராம் அளவுக்கு தொடர்ந்து பல மாதங்களுக்கு எடுக்கும்போதுதான் ஏற்றுக்கொள்ளாமல் போகும்.

சமீப காலமாக சோயா உணவுகள் பிரபலமாகி வருகின்றன. வீகன் உணவுக்காரர்கள் அதிகரித்ததன் விளைவாக பலரும் பால் உணவுகளையும் பனீர் போன்றவற்றையும் சாப்பிடுவதில்லை. எனவே தாவர அடிப்படையிலான புரதம் என்று பார்த்தால் வேகவைத்த சோயாவில் (100 கிராம் அளவில்) 18 கிராம் புரதம் இருக்கிறது.

நார்ச்சத்தும் இதில் அதிகம் என்பதால், மலச்சிக்கலுக்கும் தீர்வாகிறது. அதாவது 100 கிராம் சோயாவில் 6 கிராம் அளவு நார்ச்சத்து இருக்கிறது. கலோரியும் வெகு குறைவு என்பதால் எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கும் ஏற்றது. சைவ உணவுக்காரர்களுக்கு புரதச்சத்தைப் பெற சோயா சிறந்த உணவு.

சோயாவில் ஃபைட்டோஈஸ்ட்ரொஜென் என்கிற தாவர ஈஸ்ட்ரோஜென் உள்ளது. எனவே மெனோபாஸ் அறிகுறிகள் உள்ளோருக்கு சோயா உணவுகள் சாப்பிடச் சொல்வார்கள். புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கும்.

'இரிடபுள் பவல் சிண்ட்ரோம்' (Irritable bowel syndrome) எனப்படும் பாதிப்பு உள்ளவர்களில் சிலருக்கு இது ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். அவர்களுக்கு இந்த உணவானது வயிற்று உப்புசத்தையும் அசௌகர்யத்தையும் ஏற்படுத்தலாம்.

சோயா உணவு

'எடமாமே' (Edamame) என ஒன்று கிடைக்கிறது. இது பச்சை சோயா. இதை அப்படியே வேகவைத்துச் சாப்பிடலாம். இதன் உள்ளே உள்ள விதைகளைத்தான் நாம் பயன்படுத்துகிறோம். பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் புரோட்டீன் ஸ்நாக்ஸாக இது விற்கப்படுகிறது.

சோயாபீன் ஆயில் கிடைக்கிறது. சோயாவைப் புளிக்க வைத்துத் தயாரிக்கப்படுகிற 'டெம்பே' (Tempeh) கிடைக்கிறது. பனீரை போலவே இதைப் பயன்படுத்தலாம். டோஃபு என்ற பெயரில் சோயாவிலிருந்து பெறப்படும் பனீர் கிடைக்கிறது. சோயா சங்க்ஸ் கிடைக்கின்றன. சோயா மாவு கிடைக்கிறது. கொலஸ்ட்ரால் அதிகமுள்ளோர், வாரத்துக்கு மூன்று நாள்களுக்கு 3 கப் கோதுமைக்கு ஒரு கப் சோயா மாவு வீதம் கலந்து சப்பாத்தி செய்து சாப்பிடலாம்.

லாக்டோஸ் இன்டாலரன்ஸ் எனப்படும் பால் உணவுகள் ஒவ்வாமை உள்ளவர்களால் பால் மற்றும் பால் உணவுகளைச் சாப்பிட முடியாது. அவர்களுக்கு சோயா மில்க் வரப்பிரசாதம். சோயா சாஸ் கிடைக்கிறது. இதில் சோடியம் அதிகம் என்பதால் அடிக்கடி உபயோகிக்க வேண்டாம். மற்றபடி சோயாவில் ஏராளமான உணவுகள் கிடைக்கின்றன. விதம்விதமாகப் பயன்படுத்தலாம். சிலருக்கு சோயா உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அவர்களும் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: சோயா உணவுகளை எல்லோரும் சாப்பிடலாமா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top