Doctor Vikatan: கர்ப்பமான நிலையில் கேன்சர்... குழந்தையைக் காப்பாற்ற முடியுமா?

0

Doctor Vikatan: என் தோழிக்கு வயது 38. திருமணமாகி 10 வருடங்கள் கழித்து இப்போதுதான் கர்ப்பமாகியிருக்கிறாள். அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியாதபடி அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சினைப்பையில் புற்றுநோய் அறிகுறி தெரிவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். சினைப்பையை எடுக்க வேண்டி வரலாம் என்றும் சொல்கிறார்களாம். இந்நிலையில் அவள் பல வருடங்கள் கழித்து உருவான கருவை காப்பாற்றுவதா, தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதா என்ற குழப்பத்தில் இருக்கிறாள். இதற்கு என்னதான் தீர்வு?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறியல் புற்றுநோய் மருத்துவர் டெல்பின் சுப்ரியா...

டெல்பின் சுப்ரியா

கர்ப்பத்தை உறுதி செய்யும் முதல் ஸ்கேனிலோ, அல்லது பத்து வாரங்களில் எடுக்கப்படும் என்டி ஸ்கேனிலோ சிலருக்கு கர்ப்பப்பையின் அருகிலுள்ள சினைப்பையில் (ஓவரீஸ்) கட்டிகள் போன்று இருப்பது சகஜம்தான். அவை சாதாரண நீர்க்கட்டிகளாக இல்லாமல் சந்தேகத்துக்குரியவையாகவும் இருக்கலாம்.

ஒருவேளை அவை புற்றுநோய்க் கட்டிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கும்பட்சத்தில், அதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். கர்ப்பமா, புற்றுநோய் பாதுகாப்பா என்றால் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பதற்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

முதல் வேலையாக டியூமர் மார்க்கர்ஸ் எனப்படும் ரத்தப்பரிசோதனை மேற்கொள்ளப்படும். அடுத்தகட்டமாக அந்தக் கட்டியின் தன்மையைக் கண்டறிய எம்ஆர்ஐ செய்ய வேண்டியது அவசியம். இந்த டெஸ்ட்டை கர்ப்பத்தின் 12 முதல் 14 வாரங்கள் முடிந்த நிலையில் செய்வதுதான் தாய்க்கும், குழந்தைக்கும் பாதுகாப்பானது.

ஒருவேளை எம்ஆர்ஐயில் அது புற்றுநோய்க் கட்டிதான் என்பது உறுதியானால், பிரசவம்வரை காத்திருப்பது ஆகாது. கர்ப்பத்தின் இரண்டாவது ட்ரைமெஸ்ட்டரான 14 முதல் 28 வார காலத்தை அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு பாதுகாப்பான காலம் என்று சொல்வோம். அந்தக் காலகட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து சினைப்பையை அகற்றலாம். அதன் பிறகு அதை பயாப்சி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

சினைப்பையிலும் புற்றுநோய் இருப்பது உறுதியானால், கர்ப்பப்பை, இன்னொரு சினைப்பை, நெறிக்கட்டிகள் உள்ளிட்ட வேறு சிலவற்றையும் சேர்த்து அகற்ற வேண்டியிருக்கும். இதுதான் சரியான சிகிச்சையாக இருக்கும்.

ஆனால் உங்கள் தோழி விஷயத்தில் அவருடையது மிகவும் பொக்கிஷமான கர்ப்பம் என்பதால், அந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டியதும் மிக முக்கியம். எனவே அறுவை சிகிச்சையின் போது புற்றுநோய் பாதித்துள்ள சினைமுட்டைப் பையை மட்டும் அகற்றிவிட்டு, குழந்தை வளர வளர, கூடவே கீமோதெரபி கொடுக்கும் ஆப்ஷனும் உண்டு.

புற்றுநோய்

கர்ப்ப காலத்தில் கொடுக்கும்படியான பாதுகாப்பான கீமோதெரபி மருந்துகள் உள்ளன. அவற்றை மீதமிருக்கும் கர்ப்ப காலத்தைப் பொறுத்துக் கொடுத்துவிட்டு, 37-38 வாரங்களில் குழந்தையையும் பாதுகாப்பாக டெலிவரி செய்துவிட முடியும்.

இப்படியெல்லாம் செய்வதால் குழந்தைக்கு பக்க விளைவுகள் ஏதும் இருக்குமா என்றால் அப்படி நிகழ்ந்ததற்கான விஞ்ஞானபூர்வ ஆதாரங்கள் இதுவரை இல்லை. வளர்ச்சி தொடர்பான சின்னச் சின்ன பிரச்னைகள் வேண்டுமானால் இருக்கலாமே தவிர, குழந்தை பிறவிக்குறைபாடுகளுடன் பிறப்பதற்கெல்லாம் வாய்ப்புகள் இல்லை.

பிரசவமானதும் தாய்க்கு ஏற்கெனவே குறிப்பிட்டபடி கர்ப்பப்பை, சினைப்பை, நெறிக்கட்டிகள் உள்ளிட்ட பாகங்களை அகற்ற வேண்டியிருக்கும். குழந்தையையும் காப்பாற்றிவிட முடியும். பாதுகாப்பான சிகிச்சையையும் கொடுக்க முடியும். பிரசவத்துக்குப் பிறகு மறுபடி தாய்க்கு ஸ்கேன் செய்து, புற்றுநோய்ப் பரவலின் தீவிரம் எப்படியிருக்கிறது என்று பார்த்து, தேவைப்பட்டால் மறுபடி கீமோதெரபி கொடுக்க வேண்டியிருக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: கர்ப்பமான நிலையில் கேன்சர்... குழந்தையைக் காப்பாற்ற முடியுமா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top