`ஏரிகளை காக்கத்தவறிய கர்நாடக அரசு; ரூ.500 கோடி அபராதம் செலுத்ததான் வேண்டும்' - பசுமை தீர்ப்பாயம்

0

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு, ‘ஐ.டி ஹப்’ ஆக உருவெடுத்து அசுர வளர்ச்சியைக்கண்டு இன்று நாட்டின், ‘சிலிக்கான் வேலி’ என்றும், ‘எலக்ட்ரானிக்’ சிட்டி எனவும் அழைக்கப்படுகிறது. முன்பு பெங்களூரில், 850க்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தன. நகரம் வளர வளர, கட்டட ஆக்கிரமிப்புகள் அதிகரித்து பல ஏரிகள் இருந்த இடமே தெரியாமல் மாயமாகி, இன்று அடுக்குமாடி குடியிருப்புகளாக காட்சியளிக்கின்றன. அரசும் சில ஏரிகளை மூடி, பஸ் ஸ்டாண்டு மற்றும் அரசு அலுவலகங்கள் கட்டியுள்ளன.

பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி, பொம்மசந்திரா, பெல்லந்துார் என, நகரின் பல இடங்களில் ஏரிகளுக்கு அருகே, அதிக நச்சுத்தன்மையுள்ள கழிவுநீரை வெளியிடும் வகையிலான ‘சிகப்பு’ பிரிவு கம்பெனிகள் அதிகம் உள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல், பெல்லந்துார், சந்தபுரா, வர்துார் உள்பட நகர் முழுதும் உள்ள ஏரிகளில் அப்படியே கலக்கப்படுவதால் நீர் கடுமையாக மாசடைந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது.

கழிவுநீரால் நுரையுடன் செல்லும் ஏரி நீர்.

ரூ.500 கோடி அபராதம்!

இந்த நிலையில், 2017-ல் சந்தபுரா ஏரி கடுமையாக மாசடைந்துள்ளதாக, தேசிய பசுமை தீர்ப்பாயைத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஏரியை சீரமைத்து, பாதுகாப்பதோடு ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கர்நாடக அரசுக்கு காலக்கெடு விதித்து உத்தரவிட்டது. காலக்கெடு முடிந்தும் கர்நாடக அரசு ஏரியை காக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.

இதைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை மீறியதற்காகவும், காலக்கெடுவுக்குள் ஏரியை காக்க தவறியதற்காகவும், தேசிய பசுமை தீர்ப்பாயம் இரண்டு மாதங்களுக்கு முன் கர்நாடக அரசுக்கு, 500 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. நாடு முழுவதிலும் இந்தத்தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. தீர்ப்பை எதிர்த்து கடந்த வாரம் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்தது.

தொழிற்சாலை கழிவுகளால் மாசுபட்டுள்ள ஏரி.

கடந்த, 3-ம் தேதி மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை பெஞ்ச் நீதிபதிகள், ‘‘ஏரிகளை பாதுகாப்பதில் கர்நாடக அரசு தோல்வியடைந்து உள்ளது. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவையும் அமல்படுத்தாமல், மாநில அரசு பயமின்றி அலட்சியமாக செயல்படுகிறது. இதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அபராத தொகையை விரைவில் செலுத்த வேண்டும்,’’ என, காட்டமாக தனது கருத்தை பதிவு செய்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதிகள்.

500 கோடி ரூபாய் அபராதம், கர்நாடக அரசின் மனு தள்ளுபடி என, ஏரிகளின் பாதுகாப்பை வலியுறுத்த, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த இரண்டு நிலைப்பாட்டையும் சூழல் ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர்.


மேலும் படிக்க `ஏரிகளை காக்கத்தவறிய கர்நாடக அரசு; ரூ.500 கோடி அபராதம் செலுத்ததான் வேண்டும்' - பசுமை தீர்ப்பாயம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top