65 பேரை பலி கொண்ட பீகார் கள்ளச்சாராயம்: `இதற்கெல்லாம் நிவாரணம் தர முடியாது’ - நிதிஷ் குமார் காட்டம்

0

பீகாரில் மது விலக்கு கொள்கை அமலில் இருக்கிறது. ஆனால் கள்ளச்சாராயம் தாராளமாக கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. குறிப்பாக கிராமங்களில் கள்ளச்சாராயம் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கிறது. போலீஸாரால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து அமலில் இருக்கும் இந்த மது விலக்கு கொள்கையால் அடிக்கடி கள்ளச்சாராயத்தை குடித்து பலரும் உயிரிழந்து வரும் நிகழ்வும் நடக்கிறது.

புதிதாக சப்ரா மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த இரண்டு நாள்களாக ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இதுவரை 65 பேர் உயிரிழந்துவிட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கொடுக்கவேண்டும் என்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர்நிதிஷ் குமார், ``கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்க முடியாது. கள்ளச்சாராயத்தை குடித்தால் இறந்துதான் போவார்கள். மது விலக்கு அமலில் இல்லாத மாநிலங்களிலும் கள்ளச்சாராயம் குடித்து அதிகமானோர் உயிரிழக்கத்தான் செய்கின்றனர்.

அதில் மத்திய பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. இது தவிர உத்தரப்பிரதேசம், ஹரியானாவிலும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அங்கு கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடந்தால் அதை மட்டும் பத்திரிகையில் வெளியிட மறுக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் மாநிலத்தில் நடந்தால் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். இதுவே குஜராத்தில் பாலம் இடிந்தது குறித்து ஒரு செய்தி மட்டும் வெளியிட்டு இருந்தீர்கள். இதுவே மேற்கு வங்கத்தில் நடந்தால் அதனை பெரிய அளவில் விளம்பரப்படுத்துகிறார்கள். யாராவது மதுவுக்கு ஆதரவாக பேசினால் அது உங்களது நன்மைக்கானதாக இருக்காது. கள்ளச்சாராயம் குடித்தால் இறந்துபோவீர்கள் என்று சொல்கிறோம். அப்படி இருந்தும் குடித்தால் நாங்கள் இழப்பீடு கொடுக்க வேண்டுமா? அது நிச்சயம் நடக்காது” என்று தெரிவித்தார். நிதிஷ் குமாரின் இந்த அறிவிப்பு கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக மனித உரிமைகள் கமிஷன் பீகார் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.


மேலும் படிக்க 65 பேரை பலி கொண்ட பீகார் கள்ளச்சாராயம்: `இதற்கெல்லாம் நிவாரணம் தர முடியாது’ - நிதிஷ் குமார் காட்டம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top