துப்பட்டாவால் கழுத்தை நெரித்து இளம்பெண் கொலை... காரில் எடுத்து செல்லப்பட்ட உடல் - ஓட்டுநர் கைது!

0

தஞ்சாவூரில், தனியார் பஸ் டிரைவரான இளைஞர் ஒருவர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து இளம் பெண் ஒருவரிடம் பழகியுள்ளார். இருவரும் காதலித்த நிலையில் ஏற்கெனவே டிரைவருக்கு திருமணம் ஆனது இளம் பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தன்னையும் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய இளம் பெண்ணை அந்த டிரைவர் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை வாய்க்காலில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம் பெண்ணை கொலை செய்த நாகராஜ்

தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூர் பகுதியைச் சேர்ந்தவர் அகல்யா (26). கல்லுாரி படிப்பை முடித்திருக்கும் அவர் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுவதற்காக தஞ்சாவூரில் உள்ள மாவட்ட மைய நுாலகத்தில் படித்து வந்துள்ளார். அதற்காக தினமும், மேலஉளூரில் இருந்து தனியார் பஸ் மூலம் தஞ்சாவூருக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி நூலகத்திற்கு சென்ற அகல்யா வீடு திரும்பவில்லை. பயந்து போன அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அகல்யாவை தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் வடசேரி பாசன வாய்க்காலில் இளம்பெண் ஒருவரின் உடல் கிடப்பதை பார்த்தவர்கள் தஞ்சாவூர் தாலுகா போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

கொலை

உடனே, உடலை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தியதில் வாய்க்காலில் கிடந்தது காணாமல் போன அகல்யா என்பது தெரியவந்தது. அகல்யா எப்படி இறந்தார் அவர் உடல் அந்த பகுதிக்கு எப்படி வந்தது என போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதற்காக அகல்யாவின் செல்போனை ஆய்வு செய்ததில் தஞ்சாவூர் ஞானம் நகரை சேர்ந்த நாகராஜ் (25) என்ற இளைஞர் அகல்யாவிடம் கடைசியாக பேசியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸார் சந்தேகத்தின் பேரில் நாகராஜை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் அகல்யாவை கொலை செய்து விட்டேன் என கூறி போலீஸாரை அதிர வைத்த நாகராஜை கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ``நாகராஜ், தஞ்சாவூர்– பட்டுக்கோட்டை மார்க்கத்தில் தனியார் பஸ் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.

அகல்யா, மேலஉளூரில் இருந்து தினமும் தஞ்சாவூருக்கு நாகராஜ் ஓட்டி வந்த பஸ்ஸில் சென்றுள்ளார். இதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலிக்க தொடங்கியுள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நெருங்கி பழகி வந்த இருவரும் வெளியிடங்களுக்கும் சென்று வந்துள்ளனர்.

நாகராஜ் தனக்கு திருமணமானதை மறைத்து அகல்யாவிடம் பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு பிறகு நாகராஜ் திருமணமானவர் என்பது அகல்யாவிற்கு தெரிய வர அதிர்ச்சியடைகிறார். உயிருக்கு உயிராக காதலித்த அகல்யா நாகராஜிடம் தன்னையும் திருமணம் செய்து கொள் என கூறி வந்துள்ளார்.

விளையாட்டாக சொல்கிறார் சமாளித்து விடலாம் என நினைத்துள்ளார் நாகராஜ். ஆனால் திரும்ப திரும்ப திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அகல்யா நாகராஜிடம் வற்புறுத்த தொடங்கியுள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னை தீர்வதற்கு அகல்யாவை தீர்த்து கட்டுவது மட்டுமே ஒரே வழி என யோசித்த நாகராஜ் கொலை செய்வதற்கான திட்டம் போட்டுள்ளார்.

கொலை செய்த டிரைவர் நாகராஜ்

இதையடுத்து, கடந்த 6-ம் தேதி அகல்யாவை காரில் அழைத்துச் சென்ற நாகராஜ் புதுக்கோட்டை சாலையில் ஆள் நடமாட்டமே இல்லாத பகுதிக்கு சென்று காரை நிறுத்தியுள்ளார். அன்பாக பேசுவது போல் நடித்து அகல்யா போட்டிருந்த துப்பட்டாவை பிடித்து இறுக்கி கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். மூச்சு அடங்கியதும் அகல்யா உடலை காரில் வைத்தே பல கிலோ மீட்டர் தூரம் எடுத்து சென்றவர், வடசேரி வாய்க்காலில் போட்டு விட்டதாக தெரிவித்தார். நாகராஜிடம் மேலும் விசாரணை தொடர்ந்து வருகிறது” எனத் தெரிவித்தனர்.


மேலும் படிக்க துப்பட்டாவால் கழுத்தை நெரித்து இளம்பெண் கொலை... காரில் எடுத்து செல்லப்பட்ட உடல் - ஓட்டுநர் கைது!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top