ஈரோடு: தலைமைக் காவலர்களிடையே மோதல்... இருவரை சஸ்பெண்ட் செய்த எஸ்.பி.!

0

ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் சுரேஷ் (43). இவரின் நண்பரான ஈரோடு, கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக பணியாற்றிய கல்யாணசுந்தரம், அலட்சியமாக பணியாற்றியதாக சமீபத்தில் பவானிசாகர் போலீஸ் ஸ்டஷனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

கடந்த ஓராண்டுக்கு முன் தலைமைக் காவலர் சுரேஷ் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள பைனான்சியரிடம் ரூ. 1 லட்சம் கடன் வாங்கியிருந்தார். சுரேஷ் வாங்கிய கடனுக்காக நண்பர் கல்யாணசுந்தரம், ஜாமீன் கையெழுத்து போட்டிருந்தார். குமாரபாளையத்தில் உள்ள பைனான்சியரை பார்த்து பணம் கொடுக்காமல் கால தாமதம் ஆனதால், கடந்த 5 நாள்களுக்கு முன் அதுகுறித்து பேசுவதற்காக தலைமைக் காவலர்கள் சுரேஷும், கல்யாணசுந்தரமும் சென்றனர்.

தமிழ்நாடு காவல்துறை

அப்போது சுரேஷுக்கும், கல்யாணசுந்தரத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் சுரேஷிடம் இருந்த வாக்கி- டாக்கியை பிடுங்கி கல்யாணசுந்தரம் அங்குள்ள வாய்க்காலில் தூக்கி எறிந்து விட்டார் என்று சொல்லப்படுகிறது.

இதுகுறித்து சுரேஷ், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், கல்யாணசுந்தரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி இருவரும் சமாதானமாக போவதாக எழுதி கொடுத்தனர்.

இந்த தகவல் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகனுக்கு தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் அழைத்து விசாரணை நடத்திய அவர் தலைமைக் காவலர்கள் சுரேஷ், கல்யாணசுந்தரம் ஆகிய இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.


மேலும் படிக்க ஈரோடு: தலைமைக் காவலர்களிடையே மோதல்... இருவரை சஸ்பெண்ட் செய்த எஸ்.பி.!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top