தைவானை சுற்றிவளைக்கத் தயாராகும் சீனா... போர் அபாயம் எழுகிறதா?!

0

தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில், சீனாவின் கடுமையான எதிர்ப்பை மீறி கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொண்டார். அதற்குப் பின்னால், சீனா போர் விமானங்களை அனுப்பியதால், தற்போது அங்கு போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. தங்களை அச்சுறுத்திவருவதாக சீனா மீது தைவான் குற்றம்சாட்டியிருக்கிறது.

நான்சி பெலோசி

1927-ம் ஆண்டு முதல் 1949 வரை சீனாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அதன்பிறகு, பல தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய தைவான், தனிநாடாக உருவெடுத்தது. அந்த நாட்டை சீனா அங்கீகரிக்க மறுக்கிறது. இப்போதும் தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதிதான் என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும், தைவானுடன் மற்ற நாடுகள் நட்பு பாராட்டுவதை சீனா கடுமையாக எதிர்க்கிறது.

உலக அரசியலில் இரு துருவங்களாக அமெரிக்காவும் சீனாவும் இருந்துவரும் நிலையில், தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துவருகிறது. சீனாவின் கடுமையான எதிர்ப்பை மீறி, தைவானுடனான நட்புறவை அமெரிக்கா தொடர்ந்துவருகிறது. மேலும், சீனாவின் எதிர்ப்பை மீறி தைவானுக்கு ஆயுதங்களை வழங்கி வருகிறது அமெரிக்கா. இந்தச் சூழலில், சீனாவின் எதிர்ப்பை மீறி கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொண்டார். அதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

சீனாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி நான்சி பெலோசி தைவான் சென்றார். அவரது பயணத்தையொட்டி, ​​ஒரு விமானம் தாங்கி கப்பல் உள்ளிட்ட நான்கு அமெரிக்க போர்க்கப்பல்கள் தைவானின் கிழக்கே நிலைநிறுத்தப்பட்டன. யுஎஸ்எஸ் ரொனால்டு ரீகன் என்ற விமானம் தாங்கி கப்பல், தென் சீனக் கடலைக் கடந்து பிலிப்பைன்ஸ் கடலில் நிலைநிறுத்தப்பட்டது. என்று அமெரிக்க கடற்படை அதிகாரி செவ்வாயன்று ராய்ட்டர்ஸிடம் உறுதிப்படுத்தினார். அது, சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

தைவான்

அதைத் தொடர்ந்து, சீன ராணுவம் தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து மிகப்பெரிய அளவில் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. சீனாவின் பயிற்சி தங்கள் மீது போர் தொடுப்பதற்கான ஒத்திகை என்று தைவான் குற்றம் சாட்டியது. இதனால், இரு நாடுகள் இடையே போர்ப் பதற்றம் உருவானது. இந்த நிலையில், தைவானுடனான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் சட்ட மசோதா ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரம் கையெழுத்திட்டார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை தைவான் வரவேற்க, சீனா அதை வன்மையாக கண்டித்தது. மேலும், தைவானை மிரட்டும் விதமாக கடந்த வாரம் தைவானை நோக்கி 39 போர் விமானங்களையும், மூன்று போர்க் கப்பல்களையும் சீனா அனுப்பியது. இதனால், இரு நாடுகளின் எல்லையில் மீண்டும் போர் பதற்றம் உருவானது.

தைவானை சுற்றிய வான் பரப்பிலும், நீர்ப் பரப்பிலும் கடுமையான போர்ப்பயிற்சியில் ஈடுபட்டதாக சீன ராணுவம் கூறியது. அமெரிக்காவிடமிருந்தும் தைவானிலிருந்தும் அதிகரித்துவரும் ஆத்திரமூட்டலுக்கு சீன ராணுவத்தின் உறுதியான பதில் இதுதான் என்று சீன ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், தேசிய இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதியுடன் பாதுகாக்க சீன ராணுவம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

சீனா - தைவான்

இந்த நிலையில், டிசம்பர் 25-ம் தேதி காலை 6 மணியிலிருந்து டிசம்பர் 26-ம் தேதி காலை 6 மணி வரை தைவானை நோக்கி 71 போர் விமானங்களையும், ஏழு போர்க் கப்பல்களையும் சீனா அனுப்பியதாக தைவான் ராணுவ அமைச்சகம் குற்றம் சாட்டியிருக்கிறது. இந்த நிலையில், தனது இறையாண்மையையும் நாட்டின் எல்லையையும் பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று சீன ராணுவம் கூறியிருக்கிறது.

சீனாவின் போர் விமானங்களும் போர்க்கப்பல்களும் தைவானை சுற்றிவளைத்திருந்தாலும், அது போராக மூளுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கருதப்படுகிறது. தைவான் கூறுவதைப்போல, அந்த நாட்டை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு நடவடிக்கையில் சீனா இறங்கியிருக்கிறது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.


மேலும் படிக்க தைவானை சுற்றிவளைக்கத் தயாராகும் சீனா... போர் அபாயம் எழுகிறதா?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top