கட்டடக் கலைக்குப் பெருமை சேர்க்கும் தாரமங்கலம் கயிலாசநாதர் கோயில்; வியக்கவைக்கும் சிற்பக் களஞ்சியம்!

0
தொன்று தொட்டு விளங்கிவரும் தமிழ்ப் பாரம்பரியத்தில் கட்டடக்கலைக்குப் புகழ்பெற்றவர்கள் நாம். தமிழர்களின் கட்டடக்கலைக்கு மிகப்பெரிய சான்றாக தஞ்சை பெரிய கோயில் உள்ளது. அதைப்போலவே அரிய பொக்கிஷமாகத் திகழும் தாரமங்கலம் கயிலாசநாதர் ஆலயம் உள்ளது. தாரமங்கலம் சேலத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது.

மேற்கு பார்த்தபடி அமைந்த சிவன் கோயில் இது, இந்த பழைமையான சிவன் கோயில் தமிழர்களின் சிற்பக்கலைகளுக்கு மேலும் ஒரு சான்று எனலாம். இந்த கோயிலில் மூலவர் கயிலாசநாதர், தாயார் கற்பகாம்பாள் அருள் பாலிக்கிறார்கள். இக்கோயிலிலுள்ள இறைவனை சந்திரனும், சூரியனும் வந்து தொழுதுச் செல்வதாகக் கூறப்படுகிறது.

இந்த ஊருக்கு தாரமங்கலம் என்று பெயர் வரக்காரணம், சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இங்கு திருமணம் நடந்தது என்றும், திருமால் தாரை வார்த்துக் கொடுத்து மணவிழாவினை நடத்தியதால் ‘தாரமங்கலம்’ என்ற பெயர் வந்ததென்றும் கூறுவர்.

தாரமங்கலம் கயிலாசநாதர் கோயில்

தல வரலாறு:

கிபி 12-ம் நூற்றாண்டில் கெட்டி முதலியார் இங்கு ஆட்சி செய்து வந்தார். அப்போது பசுக்கள் தினந்தோரும் மேய்ச்சலுக்கு போகும்போது ஒரு பசு மட்டும் குறிப்பிட்ட புற்றினில் தினமும் பால் சுரக்கிறது என்று தகவல் வந்தவுடன் அவர் அந்தப் புற்றை தோண்டி பார்த்தபோது சிவலிங்கம் காணப்பட்டது. அதனால் அவர் அங்கேயே வழிபாடு செய்ததாகவும் பிறகு வந்த மன்னர்கள் அங்கு கோயில் எழுப்பியதாகவும் வரலாற்றில் கூறப்படுகிறது.

கோயிலின் சிறப்புகள்:

இக்கோயிலிலுள்ள இறைவனை சந்திரனும், சூரியனும் வந்து தொழுது செல்வதாகக் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் உத்தராயண, தட்சணயான புண்ணிய காலங்களில் மாலை வேளையில் சூரியனின் கதிர்களும், சந்திரன் ஒளியும் சிவலிங்கத்தின் மீது படுகின்றன.

அதாவது, சூரிய ஒளி மூலஸ்தான சிவலிங்க மூர்த்தி மேல் விழுவதை சூரிய பூஜை என்று கூறுவர். சூரியனுடைய கதிர்கள் ராஜகோபுர வாயிலின் வழியே வந்து, நந்தி மண்டபத்தின் ஊடே புகுந்து, பின் மூன்று உள்வாயிலையும் கடந்து சிவலிங்கத்தின் மேல் படுவது அபூர்வமாகக் கருதப்படுகிறது.

தாரமங்கலம் கயிலாசநாதர் கோயில்

சந்திரனுக்கும், சூரியனுக்கும் தாரகாபதி, தாரகன் என்ற பெயர்கள் இருப்பதால் தாரமங்கலம் என்ற பெயர் உண்டாயிற்று என்றும் கூறுவார்கள். கோயிலில் உட்பிரகார தூண்கள் எல்லாவற்றிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடு அமைந்த திருவுருவங்கள் காணப்படுகின்றன. கோயில் என்பது இறைவனின் இருப்பிடம் என்பதைத் தாண்டி மக்களின் ‘பாதுகாப்பு அரண்' என்னும் கொள்கையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. எதிரி நாட்டு படை தாக்க வரும்போது பொன், பொருள், மக்களைப் பாதுகாக்கும் வீதம் இந்தக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம் 90 அடி உயரம் கொண்டது. வாசலில் 20 அடி கொண்ட வேங்கை மரத்தினாலான கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கதவுகளிலும் 60 கூர்மையான உலோகக் குமிழ்கள் வீதம் மொத்தம் 120 கூரிய உலோகக் குமிழ்கள் அமைக்கப்பட்டுள்ளன. யானை வைத்து கதவுகளை உடைக்கும் அந்தக் காலத்தில் யானை முட்டி மோதி உடைக்கும் போது குத்தி கிழித்துவிடும்படி நுணுக்கமாக இவை அமைக்கப்பட்டுள்ளன.

தாரமங்கலம் கயிலாசநாதர் கோயில் கதவு

சிங்கமுகமும் மனித தலையும் கொண்ட யாழியின் வாயில் உள்ள கல் உருண்டையை நாம் எவ்வாறு வேண்டுமானலும் உருட்டலாம் ஆனால் கல்லை வெளியே எடுக்க முடியாது. கோபுரத்தை அடுத்துள்ள சிவப்பு பவளக்கல் படிகளில் 5 நிமிடம் அமர்ந்தாலே போதும் நம் உடலில் உள்ள வெப்பம் தனிந்து விடும். இந்தச் சிறப்புகள் தமிழ்நாட்டில் எங்கேயும் கிடையாது. இந்தக் கோயிலின் கோபுரங்கள் ஒரு தேர் போலவும் யானைகள் குதிரைகள் கட்டி இழுப்பதுபோலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.

உலகத்திலேயே மிகச்சிறிய உயிரினமான எறும்புகள் நுழைவதற்காக துளைகளை விட்டு செதுக்கிய சிலை இந்த கோயிலில் மட்டும்தான் உள்ளது. எறும்புகள் நுழைந்து வரும் அளவுக்கு மட்டுமே துவாரம் உள்ள ஒரு மனிதனின் முகம் அமைக்கப்பட்டுள்ளது. ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்புகள் அந்தச் சிற்பத்தின் காது வழியாக உள்ளே சென்று பின்னர் மூக்கு வழியாக வெளியே வரலாம். பிறகு தாடியில் உள்ள துவாரங்கள் வழியே உள்ளே நுழைந்து மறுபக்கம் சென்று மற்றொரு காது வழியாக வெளியே செல்லும் வகையில் நுண்ணிய துவாரங்களைக் கொண்டதாகக் கல்லில் சிலை செதுக்கியுள்ளனர்.

தாரமங்கலம் கயிலாசநாதர் கோயில் படி

வளைந்த வாளுடனும், நீண்ட தாடி, தலைப்பாகையுடனும் படை எடுத்துவரும் மாலிக்கபூரின் வீரர்கள், அதை எதிர்த்து குறுவாள், கேடயத்துடன் எதிர்கொள்ளும் தமிழக மன்னர்களின் போர்க் காட்சிகள் பல இங்குச் செதுக்கப்பட்டுள்ளன.

சோழ, பாண்டிய நாடுகளில் இருந்த செல்வங்களை எல்லாம் கொள்ளையிட்ட பின்னர் அவற்றைத் தன்னுடன் வந்திருந்த யானை மற்றும் ஒட்டகங்களின் மீது பொதி மூட்டையாய் ஏற்றிக் கொண்டு திரும்பிச் செல்லும் காட்சியும் சித்திரங்களாக உள்ளது. தன்னுடைய தாய் நாட்டுக்குத் திரும்பிச் செல்லும் மாலிக்கபூரை இப்பகுதியில் வழிமறித்துத் தாக்குதல் நடத்த கெட்டி முதலியின் வீரர்கள் போர் வியூகம் அமைத்துள்ள காட்சி; பின்னர், மதுரையில் கொள்ளையடித்த செல்வங்களை எல்லாம் யானை மற்றும் ஒட்டகங்களின் மீது ஏற்றிக் கொண்டு வந்த மாலிக்கபூரின் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்கள் கொண்டு வந்த செல்வங்களை எல்லாம் கெட்டி முதலியின் வீரர்கள் பறித்துக் கொண்ட பிறகு, முதுகில் சுமையில்லாமல் யானை ஒன்று மாலிக்கபூரோடு செல்வது போன்ற ஒரு காட்சி போன்றவை ஆலயத்தின் கற்சுவரில் செதுக்கப்பட்டுள்ளன.

தாரமங்கலம் கயிலாசநாதர் கோயில் சிற்பம்

அந்தச் செல்வங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தைக் காட்டும் வகையில் சில குறிப்புகளை இந்தச் சித்திரங்களில் காட்டியுள்ளனர்.

வாழ்வில் கட்டாயம் காண வேண்டிய சிற்பக் களஞ்சியமாக இந்த கோயில் அமைந்துள்ளது எனலாம்.

- ஸ்ரீகணேஷ்


மேலும் படிக்க கட்டடக் கலைக்குப் பெருமை சேர்க்கும் தாரமங்கலம் கயிலாசநாதர் கோயில்; வியக்கவைக்கும் சிற்பக் களஞ்சியம்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top