கர்நாடகா: ``கூட்டணியின்றி நிற்போம்; ‘துக்டே துக்டே கேங்க்’ காங்கிரஸை வெல்வோம்” - அமித் ஷா

0

கர்நாடகாவில் வரும் 2023 மே மாதத்துக்குள் சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. கர்நாடகாவை ஆளும் பா.ஜ கட்சியினரும், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சியினரும், ஆட்சிக்கட்டிலில் அமர கங்கணம் கட்டிக்கொண்டு, களத்தில் படு ‘பிஸியாக’ தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியுள்ளனர். பா.ஜ.க., ‘ஜன் சங்கல்ப’ யாத்திரை நடத்தி, மக்களை சந்தித்து வாக்குக்களை சேகரித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று முந்தினம் முதல், உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்துள்ளார். நேற்று முந்தினம் காலையில், மாண்டியா மாவட்டத்தில் பிரசாரத்தை தொடங்கி, மாலையில் பெங்களூரு வந்தார். மாண்டியா பால் விற்பனை யூனியன் லிமிடெட் நிறுவனம் சார்பில், 260.9 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, ‘மெகா டெய்ரி’ மையத்தை தொடங்கி வைத்தார். பெங்களூருவில், கர்நாடக கூட்டுறவு சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தி, சென்டரல் டிடெக்டிவ் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட் (CDTI) மையத்தை தொடங்கி வைத்தார்.

CDTI மையத்தை துவங்கி வைத்த அமித் ஷா

விழாவில் பேசிய அமித் ஷா, ‘‘2023 சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க உள்ளதாக பரவலாக வதந்தி பரப்பி வருகின்றனர்.

வருகின்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும், பா.ஜ.க வேட்பாளர்கள் களமிறங்குவார்கள். எந்தக்கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், பா.ஜ.க தனித்து நின்று இரண்டில் ஒரு பங்கு வாக்குக்களை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். சமீபத்தில், 7 மாநிலங்களில் நடந்த தேர்தலில், 5 மாநிலங்களில் நாங்கள் வென்றுள்ளோம். ஆனால், மறு புறமோ காங்கிரஸ் கட்சியினர், 6 மாநிலங்களில் கடுமை சரிவை சந்தித்துள்ளனர்.

கூட்டத்தில் பேசிய அமித் ஷா

மக்களே... வளர்ச்சிக்கான, பாதுகாப்பான நாட்டை உருவாக்கிய பா.ஜ.காவுக்கு வாக்களிக்க வேண்டுமா அல்லது, ஊழலில் திளைத்த, ‘துக்டே துக்டே கேங்க்’ ஆன காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமா என்பதை தீர்மானித்துக்கொள்ளுங்கள். செய்தியாளர்கள், கர்நாடகத்தில் முன்முனை போட்டி நிலவுவதாக கூறுவதை நான் மறுக்கிறேன். ஏனெனில், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு வாக்களிப்பது காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதற்கு சமம்; இரு கட்சியும் ஒன்றுதான். அதனால், கர்நாடகத்தில் வரும் தேர்தலில் பா.ஜ.க Vs காங்கிரஸ் என்ற நேரடியான போட்டி மட்டும் தான். வரும் தேர்தலில் நாங்கள் (பா.ஜ.க) தனித்து நிற்போம், காங்கிரஸ் கட்சியை நிச்சயம் வென்று ஆட்சியமைப்போம். ‘துக்டே துக்டே கேங்க்’ காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதை கைவிட்டு, தேச நலனுக்காக பா.ஜ.கவுக்கு வாக்களியுங்கள்,’’ என, காங்கிரஸ், ஜனதா தளத்தை கடுமையாக சாடினார்.

``அமித் ஷா தனியாக நிற்பதாக அறிவித்துள்ளதால், வரும் தேர்தலில் ஜனதா தளம் கட்சி பா.ஜ.கவுடன் இணைவது வாய்ப்பில்லை. மாறாக, ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளது,’’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.


மேலும் படிக்க கர்நாடகா: ``கூட்டணியின்றி நிற்போம்; ‘துக்டே துக்டே கேங்க்’ காங்கிரஸை வெல்வோம்” - அமித் ஷா
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top