முதலீட்டை நோக்கித் திரும்பும் மக்கள்... தொடரட்டும் இந்த ஆரோக்கியமான போக்கு!

0

கார் தயாரிக்கும் நிறுவனங்களில் மெர்சிடீஸ், பென்ஸ் காருக்கு மக்களிடம் எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அப்படிப்பட்ட பென்ஸ் கார் நிறுவனத்தின் இந்தியாவுக்கான நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் சந்தோஷ் ஐயர் சமீபத்தில் சொல்லியிருக்கும் ஒரு கருத்து சமூக வலைதளங்களில் பலரும் பேசும் விஷயமாக மாறியிருக்கிறது.

‘‘பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்று எங்களுக்கு ஆண்டுதோறும் 15,000 பேர் போன் செய்கிறார்கள். ஆனால், 1,500 பேர் மட்டுமே காரை வாங்குகிறார்கள். மீதமிருப்பவர்களில் பலரும் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்யத் தொடங்கியிருப்பதால், எங்கள் காரை வாங்கவில்லை. எஸ்.ஐ.பி-க்குப் போகும் இந்தப் பணம் எங்களை நோக்கி வந்தால், எங்கள் விற்பனை பெருகும்’’ என்று சொல்லியிருக்கிறார் சந்தோஷ்.

பெரும் பணம் செலவு செய்து கார், விலை உயர்ந்த மோட்டர் பைக்குகள், செல்போன்கள் வாங்குவதைவிட, எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளத் தேவையான பணத்தை சேமிக்க வேண்டும்; அதற்கு முதலீடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான நடவடிக்கையில் மக்கள் இறங்கி இருக்கிறார்கள் என்கிற உண்மையை நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது இவரது பேச்சு.

எப்போது பணம் கிடைத்தாலும் உடனே ஏதாவது ஒரு பொருளை வாங்கி அனுபவிக்க நினைப்பதுதான் இன்றைக்கு நம்மவர்களில் பெரும்பாலானவர்களின் இயல்பான சிந்தனையாக இருக்கிறது. பணம் கிடைக்கவில்லை எனில், மாதாந்தர தவணை செலுத்தும் இ.எம்.ஐ திட்டம் மூலம் பொருளை வாங்கிவிடுகிறார்கள். ஒரு பொருளைக் கடனில் வாங்கும்போது பெரிய அளவில் வட்டி கட்ட வேண்டி இருக்கிறது. ரொக்கமாக ரூ.5 லட்சம் தந்து வாங்கக்கூடிய அதே காரை, இ.எம்.ஐ மூலம் கடனில் வாங்கும்போது ரூ.7 லட்சத்துக்கும் மேல் ஆகிவிடுகிறது. எந்தப் பொருளையும் கடனாக வாங்குவதைவிட, அதற்கான பணத்தை முதலில் சேமித்து, சரியான திட்டத்தில் முதலீடு செய்து வாங்கினால், பெரும் பணத்தை நம்மால் மிச்சப்படுத்த முடியும் என்கிற உண்மையை பணம் படைத்தவர்களைவிட நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைக்கு எஸ்.ஐ.பி மூலம் பலரும் முதலீடு செய்துவருவதால்தான், ஒவ்வொரு மாதமும் எஸ்.ஐ.பி வழியிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ரூ.13,000 கோடியைத் தொட்டிருக்கிறது. இத்தனைக்கும் மாதச் சம்பளம் வாங்குகிறவர்களில் 1% அல்லது 2% பேர்கூட எஸ்.ஐ.பி கணக்கைத் தொடங்கவில்லை. மாதச் சம்பளம் பெறும் அனைவரும் தங்கள் வருமானத்தில் 10% பணத்தை எஸ்.ஐ.பி மூலம் சேர்க்கத் தொடங்கினால், பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தைப் பெறுவதுடன், எதிர்காலத்துக்குத் தேவையான பணத்தைக் குறைவில்லாமல் சேர்க்க முடியும்!

முதலீட்டை நோக்கி மக்கள் திரும்பியிருக்கிறார்கள். இந்த ஆரோக்கியமான போக்கு என்றென்றும் தொடரட்டும்!

- ஆசிரியர்


மேலும் படிக்க முதலீட்டை நோக்கித் திரும்பும் மக்கள்... தொடரட்டும் இந்த ஆரோக்கியமான போக்கு!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top