சேலம்: இளம்பெண்ணை தனிமையில் வர வற்புறுத்தினாரா நிறுவன உரிமையாளர்?! - ஆடியோ கொண்டு அதிகாரிகள் விசாரணை

0

சேலம், அஸ்தம்பட்டி அருகே உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக இருந்து வருபவர் சங்கர். இவர் சேலம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிறுவனத்தில் 20-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் உள்பட 30 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாநகர் சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்த ஐ.டி.ஐ படித்த இளம்பெண் ஒருவர், கடந்த 9 மாதம் காலமாக அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் இருந்து பணியிலிருந்து விலகி, மற்றொரு நிறுவனத்தில் இணைந்துள்ளார். இதனால் அந்த பெண்ணிற்கு தர வேண்டிய ஊதியத்தை தராமல் இழுக்கடித்து வந்துள்ளார் சங்கர் எனக் கூறப்படுகிறது.

சங்கர்

இதனையடுத்து அந்த பெண் ஊழியர் சங்கரை செல்போனில் தொடர்புக்கொண்டு என்னுடைய சம்பளத்தை வழங்கும்படி கேட்டுள்ளார். அப்போது, கட்டுமான நிறுவன உரிமையாளர் சங்கர், `சம்பளம் வேண்டும் என்றால் நேரில் சந்திக்கலாம்’ என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. அதற்கு அந்தப் பெண், `நான் அலுவலகம் வருகிறேன் சார்’ என்று சொல்கிறார். அதற்கு, `அங்கு வேண்டாம்; வெளியே சந்திக்கலாம்’ என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, `நான் காரில் வருகிறேன். வா, ஒன்றாக ஏற்காடு சென்று உணவருந்திவிட்டு, அரைமணி நேரம் பேசிவிட்டு உன்னுடைய சம்பளத்தை வாங்கி செல்’ என்று பேசும் உரையாடல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக மாவட்ட சமுக நலத்துறையினர் இதில் சம்பந்தப்பட்ட பெண்ணை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி ரஞ்சிதா தேவியிடம் பேசியபோது, ``சம்பந்தப்பட்ட பெண்ணை அழைத்து விசாரித்ததில் அவர் அளித்த வாக்குமூலங்களைக் கொண்டு சம்பந்தப்பட்ட தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சங்கரை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளோம். மேலும் என்னுடைய தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.” என்றார்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சங்கரிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட பெண் 9 மாத காலமாக எனது நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருடைய அப்பா தான் எனது நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன் நான் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்ததால், சம்பந்தப்பட்ட பெண் என்னுடைய அனுமதி இல்லாமல், எனது லெட்டர் பேடில் அனுபவ சான்றிதழ் தயார் செய்து வேறொரு நிறுவனத்திற்கு மாற பார்த்துள்ளார். இது தெரிந்து நான் அவரின் அப்பாவை அழைத்து வந்து என்னை பார்க்க சொல்லியிருந்தேன். எனது அலுவலகத்தை பொறுத்தவரையில் எனது வாட்ஸ்அப் எப்போதும் அலுவலக கம்பியூட்டர்களில் ஒபனில் தான் இருக்கும். மேலும் இதனை அலுவலகத்தில் உள்ளவர்கள் அலுவலக பயன்பாட்டிற்காக பயன்படுத்துவது உண்டு. மேலும் சம்பந்தப்பட்ட பெண்ணை ஏற்காடு அழைத்ததற்கு காரணம், எனக்கு ஏற்காட்டிலும் அலுவலகம் செயல்பட்டுவருகிறது. என்மீது தவறான குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்” என்றார்.

மேலும் இதுதொடர்பாக அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பால்ராஜ் பேசியபோது, “சம்பந்தப்பட்ட பெண் தரப்பில் இருந்து யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. கடந்த 2 நாள்களுக்கு முன் அந்த கட்டுமான நிறுவனத்தின் மூலம் தான் புகார் ஒன்று வந்துள்ளது. அதுதொடர்பாக விசாரித்து வருகின்றோம்” என்றார்.


மேலும் படிக்க சேலம்: இளம்பெண்ணை தனிமையில் வர வற்புறுத்தினாரா நிறுவன உரிமையாளர்?! - ஆடியோ கொண்டு அதிகாரிகள் விசாரணை
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top