சரிந்து விழுந்த ராட்சத பாறை... கல்குவாரி விபத்தில் சிக்கி இருவர் பலியான சோகம்!

0

தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது, கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டத்துக்கு உள்பட்ட பிசிலவாடி கிராமம். இப்பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்தக் குவாரியில் இருந்து வெடிபொருள்களை பயன்படுத்தியும், மெகா கல்உடைப்பு இயந்திரங்கள் மூலமாக எடுக்கப்படும் பாறைகளை பயன்படுத்தி கட்டடங்கள், சாலை அமைக்கத் தேவையான ஜல்லி, எம்.சாண்ட் போன்ற கட்டுமான பொருள்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர்.  

இந்த கல்குவாரியில் நேற்று 30-க்கும் மேற்பட்டவர்கள் பணி புரிந்து கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள ஹிட்டாச்சி இயந்திரத்தின் மூலம் குவாரியின் அடிப்பகுதியில் உள்ள பாறைகள் பெயர்த்து எடுக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, கீழ் பகுதியில் 3 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஒருகட்டத்தில் கீழே இருந்த கற்கள் பெயர்த்தெடுக்கும்போது மேற்பகுதியில் இருந்த பாறை மொத்தமாக சரிந்து விழுந்தது. இந்த எதிர்பாராத நிகழ்வால் பாறைகளின் இடிபாடுகளில் கீழே பணிபுரிந்து கொண்டிருந்த மூவரும் சிக்கிக் கொண்டனர்.  

உயிரிழந்தவரை மீட்கும் மீட்புப்படையினர்.

விழுந்த பாறைகள் ஒவ்வொன்றும் மெகா சைஸில் இருந்ததால் அடியில் சிக்கிக் கொண்ட குமார், சிவராஜ் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும்  பாறை இடுக்கில் சிக்கிய மற்றொரு சிவராஜை மீட்டு சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து பிசிலவாடியைச் சேர்ந்த ஈரன் என்பவர் கூறுகையில், ``சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் சிக்கொல்லா, ராமாபுரம், பிசிலவாடி, கொள்ளேகால், குண்டல்பேட்டை, புளிஞ்சூர் போன்ற பல பகுதிகளில் இதுபோன்ற கல்குவாரிகள் எவ்வித பாதுகாப்பும் இன்றி இயங்கி வருகின்றன. இப்பகுதியில் சிக்கொல்லா, ஸ்வர்ணாவதி ஆகிய இரண்டு அணைகள் உள்ளன. இந்த நீர்த்தேக்கங்களில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகின்றன. தொடர்ந்த இப்பகுதியில் உள்ள கல்குவாரிகளில் அளவுக்கு அதிகமான வெடிபொருள்களை பயன்படுத்தி கற்களை பெயர்த்து எடுப்பதால் ஏற்படும் நில அதிர்வுகளால் இந்த இரண்டு அணைகளுக்கும் பெரும் ஆபத்து இருக்கிறது. மேலும், நில அதிர்வுகளால் வீடுகளின் சுவர்கள் கூட விரிசல் விழுகிறது.

கல்குவாரி

இதுபோன்ற கல்குவாரிகளை இயக்க முறையாக அரசு அனுமதியும் பெறுவதில்லை. முறைகேடாக நடைபெறும் கல்குவாரிகளால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் உயிருக்கு பாதுகாப்பும் இல்லை. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கூட குண்டல்பேட்டை அருகே கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் பாறைகள் சரிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு பெயரளவில் நிவாரணம் கொடுத்து, போலீஸையும் சரிகட்டி விடுவதால் இவர்களின் குடும்பம் அனாதையாகிறது. எனவே, கல்குவாரிகள் இயங்குவதை முறைப்படுத்த வேண்டும்” என்றார்.
இந்த விபத்து குறித்து சாம்ராஜ் நகர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க சரிந்து விழுந்த ராட்சத பாறை... கல்குவாரி விபத்தில் சிக்கி இருவர் பலியான சோகம்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top