Doctor Vikatan: குறட்டை என்பது கவலைக்குரிய விஷயமா? குழந்தைகள் குறட்டை விடுவார்களா?

0

Doctor Vikatan: எங்கள் வீட்டில் குழந்தை முதல், பெரியவர்கள் வரை எல்லோருக்கும் குறட்டை பிரச்னை இருக்கிறது. சின்ன குழந்தைகளுக்கும் குறட்டை வருமா? குறட்டை என்பது ஆபத்தானதா? அது ஏன் வருகிறது? தடுக்க வழிகள் உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்.

பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்

குழந்தைகள் குறட்டைவிடுவது என்பது நீங்கள் நினைக்கிற மாதிரி அசாதாரணமானது இல்லை. குழந்தைகளுக்கு மூக்கடைத்திருந்தால்கூட அது குறட்டை சத்தம் மாதிரி கேட்கலாம். குழந்தைகளுக்கு மூக்கின் அடியில் உள்ள அடினாய்டு எனப்படும் சதையும் டான்சில்ஸும் பெரிதாகி இருந்தாலும் அவர்கள் குறட்டை விடுவார்கள். அதை `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் ஆப்னியா' (Obstructive sleep apnea) என்று சொல்வோம்.

`அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் ஆப்னியா' பாதிப்பானது குழந்தையின் தூக்கத்தை மட்டுமல்ல, அதன் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கலாம். இந்த பாதிப்புள்ள குழந்தைகள், பகல் வேளைகளில் ரொம்பவும் எரிச்சலடைந்து காணப்படுவார்கள். காலையில் சீக்கிரம் எழுந்திருக்க மாட்டார்கள். தூக்கத்திலிருந்து அவ்வளவு எளிதாக அவர்களை எழுப்ப முடியாது. இன்னும் கொஞ்சம் தூக்கம் வேண்டும் என்பார்கள். பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்தும்போது தூங்குவார்கள். அதனால் படிப்பில் பாதிப்பு இருக்கும்.

இந்த மாதிரி குழந்தைகளை காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் அழைத்துச்சென்று முழுமையான பரிசோதனை செய்தால் என்ன பிரச்னை என்பதைக் கண்டுபிடிக்கலாம்.

ஸ்லீப் ஆப்னியா என்பது சற்றே ஆபத்தான ஒரு நிலைதான். பகல்நேர களைப்பு, கவனச் சிதறல், எரிச்சல், படிப்பில், வேலையில் சரியாகச் செயல்பட முடியாதது என சின்ன பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம். குறட்டை விடும்போது சில நேரங்களில் ஆக்ஸிஜன் நம் இதயம், மூளை போன்ற முக்கிய உறுப்புகளுக்குப் போவது தடைப்படலாம். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதயத்துக்கான அழுத்தம் அதிகரிக்கும்.

குறட்டை

அதீத குறட்டை என்பது மாரடைப்புக்கான ரிஸ்க்காகவும் அமையலாம். முறையற்ற இதயத்துடிப்புக்கும் காரணமாகலாம். ஸ்லீப் ஆப்னியா பாதிப்பானது நீரிழிவுக்கான ரிஸ்க்கையும் அதிகரிக்கிறது. அதே மாதிரி வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு ரத்தச் சர்க்கரை, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகமாக இருக்கும். அசாதாரணமான கல்லீரல் பாதிப்புகள் இருக்கலாம்.

தூக்கத்தின்போது சத்தமாக குறட்டை விடுவதால் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் அது தொந்தரவாக அமையும். அது உறவுப் பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம். எனவே குறட்டை என்பது சாதாரணமானது என அலட்சியம் செய்யாமல், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதுதான் சரியானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: குறட்டை என்பது கவலைக்குரிய விஷயமா? குழந்தைகள் குறட்டை விடுவார்களா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top