IPL Auction 2023: பென் ஸ்டோக்ஸ் முதல் பகத் வர்மா வரை; ஏலத்தில் சிஎஸ்கே வாங்கிய வீரர்களின் பட்டியல்!

0

ஐ.பி.எல் மினி ஏலம் நடந்து முடிந்திருக்கிறது. 405 வீரர்கள் பங்கேற்ற இந்த ஏலத்தில் 80 வீரர்கள் அணிகளால் வாங்கப்பட்டிருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஏலத்தில் சுறுசுறுப்பாகப் பங்கேற்றிருந்தது. சென்னை அணி இந்த ஏலத்திற்குள் நுழையும்போது அவர்களிடம் 20.25 கோடி ரூபாய் இருந்தது. இந்தத் தொகையைப் பயன்படுத்தி சென்னை அணி 7 வீரர்களை ஏலத்தில் வாங்கியிருக்கிறது. சென்னை அணி வாங்கியிருக்கும் அந்த வீரர்களின் பட்டியல் இங்கே..

பென் ஸ்டோக்ஸ் - 16.25 கோடி, கைல் ஜேமிசன் - 1 கோடி
Bravo - Pollard

ப்ராவோ அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு பந்துவீச்சு பயிற்சியாளராக்கப்பட்ட நிலையில் அவரின் இடத்தை நிரப்ப ஒரு தரமான ஆல்ரவுண்டர் சென்னை அணிக்குத் தேவைப்பட்டிருந்தது. ஏலத்தில் சென்னை அணி டிக் அடிக்க நினைத்த முதல் பாக்ஸூம் இதுதான். அதனால்தான் சாம் கரணுக்கும் கடுமையாகப் போட்டிப் போட்டிருந்தனர். ஆனால், சாம் கரண் கையை மீறிப்போனார். பென் ஸ்டோக்ஸூக்கும் கடைசி வரை வேடிக்கை பார்த்த சென்னை அணி 15 கோடிக்கு மேல் சென்றவுடன் நேராகக் களத்தில் குதித்து அவரை அள்ளிவிட்டது.

ராபின் உத்தப்பா இடத்திற்கு ஒரு வீரரைக் கொண்டு வர எண்ணிதான் மயங்க் அகர்வாலின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் சென்னை அணியின் மேஜை ஜரூராக இயங்கத் தொடங்கியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் கிடைக்கவில்லை. அதனால்தான் யாரும் எடுக்கத் துணியாத ரஹானேவை அடிப்படை விலையிலேயே சென்னை அணி வாங்கி போட்டிருக்கிறது. இதுபோக உள்ளூர் அணிகளுக்கு ஆடும் சில வீரர்களையும் சென்னை அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது.

- நிஷாந்த் சிந்து - 60 லட்சம்

- பகத் வர்மா - 20 லட்சம்

- அஜய் மண்டல் - 20 லட்சம்

- ஷைக் ரஷீத் - 20 லட்சம்

ஏலத்தின் முடிவில் சென்னை அணியிடம் 1.5 கோடி ரூபாய் மீதம் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க IPL Auction 2023: பென் ஸ்டோக்ஸ் முதல் பகத் வர்மா வரை; ஏலத்தில் சிஎஸ்கே வாங்கிய வீரர்களின் பட்டியல்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top