மத்திய பட்ஜெட் 2023... நடுத்தர வர்க்கத்தின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

0

வருகிற பிப்ரவரி 1-ம் தேதி அன்று 2023-24-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ‘அடுத்த 25 ஆண்டுக் கால தொலைநோக்குடன் இந்த பட்ஜெட் இருக்கும்’ என்று நிதியமைச்சர் சொல்லியிருக்கிறார். எனவே, நீண்ட காலத்துக்கான பல திட்டங்களை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஐனநாயகக் கூட்டணி அரசு, இந்த ஐந்து ஆண்டுக் கால ஆட்சியில் சமர்ப்பிக்கவிருக்கும் கடைசி முழு பட்ஜெட் இது. 2024-ம் ஆண்டு மே மாதத்தில் பொதுத்தேர்தல் நடக்கவிருப்பதால், அந்த ஆண்டில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். அதில், மக்களைக் ‘கவர்ந்திழுக்கக்கூடிய’ பெரும் பெரும் அறிவிப்புகளை வெளியிட முடியாது என்பதால், இந்த ஆண்டுக்கான பட்ஜெட் ‘சிறப்பாக’வே இருக்கும் என எதிர்பார்க்கலாம். 2023, 2024-ம் ஆண்டுகளில் 15 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ளன என்பதையும் இங்கே அடிக்கோடிட்டு நாம் குறித்துக் கொள்ளலாம்.

இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்புகளை முக்கியமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. பணவீக்கமானது ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ள அளவைவிட (6%) குறைவாக இருந்தாலும், விலைவாசி உயர்வால் சாதாரண மக்கள் கடுமையாகவே பாதிப்படைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ள (பிரெண்ட் குரூட் 87 டாலர்) நிலையில், பணவீக்கத்தையும் குறிப்பிடத்தகுந்த அளவு குறைக்கும் நடவடிக்கைகளை நிதியமைச்சர் எடுக்க வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு.

மேலும், தனிநபர் வருமான வரிச் சலுகையை ரூ.2.5 லட்சத்தில் இருந்து குறைந்த பட்சம் ரூ.3.5 லட்சம் - ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும்; தற்போது ரூ.50,000-ஆக இருக்கும் நிலைக்கழிவு (standard deduction) ரூ.80,000-ஆக உயர்த்த வேண்டும். 80C மூலமான தரப்படும் வரிச் சலுகையானது தற்போது இருக்கும் ரூ.1.50 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சம் - ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும். அது மட்டுமல்ல, வீட்டுக் கடனுக்கான வட்டிச் சலுகை தற்போது இருக்கும் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாகவும், அசலுக்குத் திரும்பக் கட்டும் பணம் ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாகவும் உயர்த்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகளும் நடுத்தர வர்க்கத்தினரிடம் உள்ளன.

நடுத்தர வர்க்கத்தினரின் இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் நிறைவேற்றினால், அரசின் வரி வருமானம் குறைந்துவிடாதா என்று கேட்கலாம். அரசின் வருமானத்தைக் கணிசமாக அதிகரித்துக்கொள்ள பல வழிகள் உள்ளன. ஆனால், நடுத்தர மக்களின் வருமானம் கணிசமாக உயராத நிலையில், அவர்களின் சுமையைக் குறைக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு அரசுக்குத்தான் உண்டு. குறைவான வரியைச் செலுத்துவதன் மூலம் மக்கள் சேமிக்கும் பணத்தை மீண்டும் செலவு செய்யத்தான் போகிறார்கள். இதனால் பொருளாதாரம் வளரவே செய்யும் என்பது நிதியமைச்சருக்கு நன்கு தெரியும். எனவே, இந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்ப்போம்!

- ஆசிரியர்


மேலும் படிக்க மத்திய பட்ஜெட் 2023... நடுத்தர வர்க்கத்தின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top