குழிமந்தி, சிக்கன் சாப்பிட்டு மரணமடைந்த நர்ஸ்; 43 ஹோட்டல்களுக்கு சீல் வைத்த சுகாதாரத்துறை!

0

கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்தவர் ரஷ்மி ராஜ் (33). இவர் கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி கோட்டயம் சங்கராந்தியில் உள்ள ஓட்டலில் (மலப்புறம் குழிமந்தி ஃபேமிலி ரெஸ்டாரன்ட்) அல்ஃபாமா சிக்கன் மற்றும் குழிமந்தி (அனலில் சமைக்கப்படும் இறைச்சி) சாப்பிட்டு உள்ளார். சாப்பிட்ட ஒரு மணி நேரத்திலேயே அவருக்கு வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரது உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து, கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு வென்டிலேட்டரில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி கடந்த 2-ம் தேதி இரவு ரஷ்மிராஜ் மரணமடைந்தார். உள் உறுப்புகளில் கிருமித்தொற்று ஏற்பட்டதே மரணத்துக்குக் காரணம் என கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடித்து நொறுக்கப்பட்ட ஹோட்டல்

இதுகுறித்து, காந்திநகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹோட்டலில் சாப்பிட்ட பிறகுதான் ரஷ்மி ராஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவரின் தந்தை சந்திரன் கூறியுள்ளார். இதே ஹோட்டலில் சாப்பிட்ட மேலும் 20 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஹோட்டலை மூடி சீல் வைத்தனர்.

கோட்டயம் நகராட்சி சுகாதாரத்துறை சார்பில் கடந்த மாதம் இந்த ஹோட்டலை ஆய்வு செய்து பூட்டியுள்ளனர். இந்த நிலையில் அந்த ஹோட்டலில் சாப்பிட்ட நர்ஸ் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சி.பி.எம் கட்சியின் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃஒ.ஐ-யைச் சேர்ந்தவர்கள் சீல் வைக்கப்பட்ட ஹோட்டலை அடித்து நொறுக்கினர். ஹோட்டலின் முன்பு வைக்கப்பட்டிருந்த அலங்கார பூச்செடிகள், கண்காணிப்பு கேமராக்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நர்ஸ் சாப்பிட்ட ஹோட்டல்

ஹோட்டலில் சாப்பிட்ட நர்ஸ் மரணமடைந்ததை தொடர்ந்து கேரளாவில் உள்ள ஹோட்டல்களில் ஆய்வு நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று 429 ஹோட்டல்களில் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டது. சுகாதாரமாக இல்லாமல் இருந்த 22 ஹோட்டல்கள், மற்றும் லைசென்ஸ் இல்லாமல் இயங்கிய 21 ஹோட்டல்கள் என மொத்தம் 43 ஹோட்டல்கள் சீல் வைக்கப்பட்டன. மேலும், 138 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 44 சாம்பிள்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜின் அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க குழிமந்தி, சிக்கன் சாப்பிட்டு மரணமடைந்த நர்ஸ்; 43 ஹோட்டல்களுக்கு சீல் வைத்த சுகாதாரத்துறை!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top