சபரிமலை: வெடிவழிபாட்டுக்காக மருந்து நிரப்பும்போது விபத்து - மூன்று பேர் படுகாயம்

0

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலகால பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. கடந்த மாதம் 27-ம் தேதி மதியம் தங்க அங்கி சார்த்தி ஐயப்ப சுவாமிக்கு மண்டல பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து அன்று இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு கோயில் நடை சார்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த 30-ம் தேதி மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்டதில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் சென்று சாமிதரிசனம் நடத்தி வருகின்றனர்.

மகரவிளக்கு பூஜை வரும் 14-ம் தேதி நடக்கிறது. வரும் 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக சபரிமலை நடை திறந்திருக்கும். மண்டல மகரவிளக்கு காலத்தில் சபரிமலை கோயில் அருகே அமைந்துள்ள மாளிகப்புறம் சந்நிதியில் வெடி வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். மாளிகப்புறம் சந்நிதி அருகே வெடி வழிபாட்டுக்காக வெடிமருந்து நிரப்பி, வெடி வெடிக்கும் கூடம் தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வெடி விபத்தில் காயம் அடைந்தவர்கள்

மாளிகப்புறம் சந்நிதியில் பக்தர்கள் பணம் செலுத்தினால் மைக்கில் வெடி வழிபாடு குறித்து அறிவிக்கப்படும். அதையடுத்து சற்று தொலைவில் உள்ள பகுதியில் தொழிலாளர்கள் உலோக உருளையில் நிரப்பப்பட்ட வெடியை வெடிக்கவைப்பார்கள். இந்த நிலையில் வெடிமருந்து நிரப்பும் பகுதியில் நேற்று (02-01-2023) திடீரென தீ ஏற்பட்டு, வெடி வழிபாட்டுக்கு பயன்படுத்தும் வெடிமருந்துகள் வெடித்து சிதறின. இதையடுத்து மூன்று தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். வெடி வழிபாடு நடத்தும் பகுதி பக்தர்கள் அதிக அளவில் செல்லாத பகுதி என்பதால் பக்தர்கள் யாருக்கும் காயம் இல்லை என கூறப்படுகிறது.

விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை

பயங்கர சப்தத்துடன் ஏற்பட்ட வெடி விபத்தால் சபரிமலையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் காயம் அடைந்த செங்கன்னூரைச் சேர்ந்த ஜெயக்குமார்(47), அமல்(28), ரஜீஷ்(35) ஆகிய மூன்று தொழிலாளிகளை பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் மீட்டு சந்நிதானத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஜெயக்குமாருக்கு 60 சதவீதம் காயமும், மற்ற இரண்டுபேருக்கு 40 சதவீதம் காயமும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயக்குமார், ரஜீஸ் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க சபரிமலை: வெடிவழிபாட்டுக்காக மருந்து நிரப்பும்போது விபத்து - மூன்று பேர் படுகாயம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top