நமக்குள்ளே...

0

அந்த நடுத்தர குடும்பத்தில் இரண்டு பெண் பிள்ளைகள். அக்கா படிப்பை முடித்தபோது திருமணமா, வேலையா என்ற பெற்றோரின் மன ஊசலாட்டத்தில் இறுதியாக மகளின் உறுதி வென்றது. வேலைப்பளுவால் அவள் சற்று தாமதமாக திரும்ப நேர்ந்த தினங்களில் வீடு கொதிநிலைக்குச் சென்றது. அலுவலகம் சார்பில் வெளியூரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வார பயிற்சிக்குச் செல்ல அவள் அனுமதி கேட்டு நின்றபோது, பல விசாரணைகளுக்குப் பிறகு அந்த மனுவுக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

நான்கு வருடங்களுக்குப் பின், இப்போது அந்தப் பெண்ணின் தங்கை படிப்பை முடிக்கிறாள். அடுத்தது வேலைதான் என்பதில் எந்தக் குழப்பமும் இல்லாமல் வீடு அவளை வழியனுப்பி வைக்கிறது. வேலை காரணமாக தாமதமாக வீடு திரும்ப நேரும் நாள்களில், அதை ஒரு தகவலாக அவள் அம்மாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் போதுமாக இருக்கிறது. வெளியூர் வேலைக்கு அவள் மாற வேண்டிய தேவை வந்தபோது, அலுவலகம் அருகில் ஹாஸ்டல் தொடங்கி, மகளின் இடமாறுதலுக்கான ஏற்பாடுகளை யோசிக்க ஆரம்பிக்கிறார் அப்பா. இப்படி, குடும்பத்தின் தலைமகள்களும், சமூகத்தின் மூத்த பெண்களும் வேலைக்குச் செல்வதில் உள்ள கட்டுப்பாடுகள், அழுத்தங்களை எல்லாம் தாங்கள் வாங்கி, வீடுகளை அந்த வழமைக்கு சிறிது சிறிதாகப் பழக்கி, தங்கள் தங்கைகளுக்கு அந்தப் பாதையை இப்போது சமன்படுத்தி வைத்துள்ளார்கள்.

படிப்பு முடித்த கையோடு மகனைப்போலவே மகளையும் வேலைக்கு அனுப்ப இப்போது வீடுகள் தயார். அவர்களை பாதுகாப்புடன் வரவேற்க நகரங்கள் தயாரா? இதற்கான பாசிட்டிவ் பதிலாக, சமீபத்தில் வெளியாகியிருக்கிறது ஓர் ஆய்வு முடிவு. `அவதார்’ என்ற பணியிட திறனாய்வுக்கான அமைப்பு, 10 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் பெருநகரங்களில், உழைப்புதளத்தில் உள்ள பெண்களுக்கு சாதகமான சூழல் உள்ள நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் இருப்பதாக அறிவித்திருக்கிறது. அடுத்தடுத்த இடங்களை புனே, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்கள் வரிசையாகப் பிடித்துள்ளன. பட்டியலிடப்பட்டுள்ள 25 நகரங்களில் மாநில தலைநகரங்கள் 10 மட்டுமே இடம்பெற்றுள்ளன. இந்திய தலைநகரான டெல்லிக்கு 14-வது இடம்.

இன்னொரு சிறப்பான தரவும் இந்த ஆய்வு முடிவில் இடம்பெற்றிருக்கிறது. 10 லட்சம் மக்கள்தொகைக்குக் குறைவான நகரங்களின் பட்டியலில், இந்திய அளவில் முதல் ஐந்து இடங்களையும் பெற்றிருப்பவை... தமிழக ஊர்களே. திருச்சி, வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர் என்ற பெயர்களைப் பார்க்கும்போது மகிழ்வும் பெருமையும் அதிகரிக்கிறது.

நம் மாநில நகரங்களும், அவற்றில் இயங்கும் பெண் உழைப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் நிறுவனங்களும் பெண்களுக்கு வழங்கும் பயன்படுத்தத்தக்க பொது வசதிகள், பாதுகாப்பு, குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கான உடனடி நடவடிக்கை, பெண்களுக்கான பிரதிநிதித்துவம் உள்ளிட்டவை, பெண் முன்னேற்றத்துக்கு பலமான அடிப்படையை அமைத்துக்கொடுத்திருக்கின்றன. கடமையைச் சிறப்பாகச் செய்த அரசுக்கும், நிறுவனங் களுக்கும் பாராட்டுகள். ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் இன்னும் பல இருந்தாலும், இந்த தருண நிறைவைக் கொண்டாடுவதும் முக்கியம்.

நாம் சமூகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறோம் என்பதை நம்பிக்கையோடு உரக்கச் சொல்வோம் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்


மேலும் படிக்க நமக்குள்ளே...
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top