அலட்சியம் ஆபத்தானது; சருமத்தை பாதிக்கும் படர்தாமரை... காரணமும் தீர்வுகளும்!

0

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் பாதிக்கக்கூடிய சரும நோயாக படர்தாமரை உள்ளது. தொற்றின் வீரியத்தைக் கண்டு கொள்ளாமல் விட்டால், உடல் முழுவதும் பரவி எரிச்சலை உண்டாகிவிடும். படர்தாமரையால் பாதிக்கப்பட்ட பலரும், தொற்று தீவிரமடைந்த பிறகே மருத்துவரை அணுகுகிறார்கள். ஆரம்பத்தில் சாதாரணமான நோயென்று அலட்சியப்படுத்துவதால், தொற்றின் பின்விளைவுகள் மோசமாவதுடன் அதை குணப்படுத்தவும் நீண்ட காலம் ஆகிறது.

வெப்பம், வியர்வை போன்ற காரணங்களால் ஏற்படும் படர்தாமரை ஆண்,பெண் இருவருக்கும் எளிதாக தொற்றிக் கொள்கிறது. குழந்தைகளை பாதிக்கக்கூடியதாகவும் உள்ளது. படர்தாமரை ஏற்படும் காரணங்களையும் தீர்வுகளையும் கண்டறிய, சருமநோய் மருத்துவர் ஷீஜா அருளிடம் பேசினோம்...

Skin Care

``அதிகமான வியர்வை வெளியேறுதல், இறுக்கமான ஆடைகளை அணிவது உள்ளிட்டவற்றால் படர்தாமரை எளிதாகப் பரவுகிறது. பெயருக்கு ஏற்றாற்போல், சருமத்தின் மேல் பகுதியில் பரவக்கூடிய ஒரு வகையான டெர்மடோஃபைட் (Dermatophyte) கிருமியால் உருவாகக்கூடிய நோய் இது. ஆரம்பத்தில் சிறு சிவப்புப் புள்ளியாக வட்ட வடிவில் இருந்தாலும் வேகமாகப் பரவக்கூடிய இயல்பு கொண்டது. இதன் ஓரங்களில் சிறிய செதில்கள் காணப்படும். ஓரங்கள் தடித்தும் இருக்கலாம். தொற்றின் வீரியம் அதிகரிக்கும்போது சிறிய சீழ் கொப்புளங்களும் காணப்படலாம்.

என்ன காரணம்?

அதிகமான வியர்வை, இறுக்கமான ஆடைகளை அணிவது, நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் சோப், டவல் போன்றவற்றைப் பயன்படுத்துவது, நீண்ட நேரமாக தண்ணீரில் இருப்பது போன்றவை படர்தாமரை ஏற்படுவதற்கான காரணங்கள். மேலும், உடல் பருமனாக உள்ளவர்கள், சர்க்கரை நோய் உடையவர்கள், நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் இந்த நோய் வர வாய்ப்புள்ளது. இது நாய், பூனையால் கூட மனிதர்களுக்குப் பரவலாம். ஏற்கெனவே படர்தாமரை உள்ளவரிடம் இருந்து மற்றவர்களுக்கு 1-3 வாரங்களில் பரவக்கூடும்.

Skin Care

படர்தாமரையானது தொடை, பிறப்புறுப்பு, அக்குள், கால் நகங்கள், இடுக்குகளில் பரவும். இரண்டு வேளை குளிப்பது, உலர வைத்த ஆடைகள், வெயில் காலங்களில் காட்டன் ஆடைகள் அணிவது, உடல் பருமனைக் குறைப்பதன் மூலமாக மீண்டும் தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம். வீட்டில் யாராவது ஒருவருக்கு படர்தாமரை ஏற்பட்டுவிட்டால் அவரது சோப் மற்றும் துணிகளை மற்றவர்கள் பயன்படுத்துவதை முற்றிமாகத் தவிர்ப்பதும், பாதிக்கப்பட்டவரின் துணிகளைத் தனியாக உலர வைப்பதன் மூலமாகவும் இதன் பரவுதலைத் தடுக்கலாம்.

செய்ய வேண்டியவை

படர்தாமரை தொற்று இருப்பது தெரிய வந்தால், உடனடியாக சரும மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெற வேண்டும். அது தவிர நீண்ட நாள்கள் ஆகியும் படர்தாமரை தொற்று குறையாமல் அதன் தொந்தரவு நீடித்தால், வேறு சில பரிசோதனைகள் மூலமாக கிருமியின் வகையைக் கண்டறிந்து தகுந்த சிகிச்சையை வழங்குவார்கள்.

மருத்துவர் ஆலோசனை பெறாமல் அனுமதியின்றி மருந்துக்கடைகளில் வாங்கிப் பயன்படுத்தும் பொதுவான மருந்துகள் மூலமாக நோயின் தன்மை குறையாது; அதன் வீரியம் அதிகரிக்கவே வாய்ப்புண்டு. படர்தாமரை தொற்று இருப்பவர்கள், கட்டாயமாக இரண்டு வேளை குளிப்பதும், நன்கு துவைத்த ஆடைகளைப் பயன்படுத்துவதும் நல்லது. அத்துடன் ஜீன்ஸ் போன்ற இறுக்கமான ஆடையைத் தவிர்த்து, தளர்வான காட்டன் துணிகளையே அணிய வேண்டும்.

சருமப் பராமரிப்பு

அதேசமயம், படர்தாமரை தொற்றினை நினைத்து பலரும் மிகவும் கவலையும் அச்சமும் கொள்கின்றனர். படர்தாமரை தீவிரமான தொற்று என்பது உண்மைதான். எனினும் தொற்று ஏற்பட்டதும் மருத்துவர் ஆலோசனையின்படி சிகிச்சை எடுத்துக் கொண்டால் எளிதில் குணம் பெறலாம்.

சரியான சிகிச்சையும், சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதும் படர்தாமரையை வெல்வதற்கான எளிய வழிகள்” என்கிறார் டாக்டர் ஷீஜா.


மேலும் படிக்க அலட்சியம் ஆபத்தானது; சருமத்தை பாதிக்கும் படர்தாமரை... காரணமும் தீர்வுகளும்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top