ஒன் பை டூ

0

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

``கதவைத் திறந்ததை தேஜஸ்வியே ஒப்புக்கொண்ட பிறகும் அண்டப்புளுகு அண்ணாமலை, வழக்கம்போல பொய் சொல்லியிருக்கிறார். எளிமையாகத் திறக்கக்கூடிய எமர்ஜென்சி டோரை, ‘ஸ்க்ரூவைக் கழற்றித் திறக்க வேண்டும்’ என்று சொல்லும் அளவுக்குத்தான் அண்ணாமலைக்கு அறிவு இருக்கிறது. இதுநாள் வரையில் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சாதித்துக்கொண்டிருந்தவர், இப்போது ‘கதவு ஏற்கெனவே திறந்திருந்தது’ என்று சொல்லியிருப்பது அடுத்த பொய். இந்த விவகாரத்தில், ‘தேஜஸ்விதான் கதவைத் திறந்தார்... அதற்காக மன்னிப்பும் கேட்டுவிட்டார்’ என்று விமானப் போக்குவரத்து அமைச்சரே வெளிப்படையாகச் சொல்லிவிட்டார். அதன் பிறகும், ‘தேஜஸ்வி கதவைத் திறக்கவில்லை’ என்று முட்டுக்கொடுத்து, தனது முட்டாள்தனத்தை நிரூபித்துக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை. இதையெல்லாம் பார்க்கும்போது கதவைத் திறந்ததில், இவருக்கும் ஏதாவது பங்கு இருக்குமோ என்று தோன்றுகிறது. இது ஒன்றும் சாதாரணமாகக் கடந்து செல்லும் விஷயம் கிடையாது. இதையே ஒரு சாமானியன் செய்திருந்தால், இந்நேரம் வழக்கு, விசாரணை என்று கைதுவரை சென்றிருக்கும். எனவே, இது குறித்து முறையான விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரையில் அரைவேக்காட்டுத்தனமாக எதையாவது உளறாமல் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் அண்ணாமலை.’’

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி, மாநில துணைத் தலைவர், பா.ஜ.க

``அங்கு நடந்ததைத்தான் அண்ணாமலை சொல்லியிருக்கிறார். விமானத்தில் பயணம் செய்யும் அனைவருமே பயணிகள்தான். அவர்களில், அரசியல்வாதி, சினிமாக்காரர்கள் என்ற பாகுபாடு கிடையாது. தேஜஸ்வி அங்கிருந்த பயணிகளின் உயிரோடு விளையாடினார் என்று சொல்வது அபத்தமானது. மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகமே, ‘இது தற்செயலாக நடந்திருக்கிறது’ என்று விளக்கம் அளித்திருக்கிறது. இருந்தபோதிலும், அவர் வேண்டுமென்றே செய்ததுபோல ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கப் பார்க்கிறார்கள். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை, பொருளாதாரத் தேக்கநிலை, சமூக அநீதிச் சம்பவங்கள் நடக்கின்றன. இதையெல்லாம் மறைப்பதற்கு, உண்மை இல்லாத ஒரு விஷத்தைப் பேசி மக்களைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள். அந்த விமானத்தில், பயணித்த தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளரே, விமானத்தில் என்ன நடந்தது என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதன் பிறகும் எங்கிருந்து இப்படியான மோசமான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. அண்ணாமலை, ஆளும் தி.மு.க அரசின் ஊழல் குற்றச்சாட்டுகளை மக்கள் மன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். தமிழகத்தில் பா.ஜ.க அசுர வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கிறது. இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாததால்தான், இல்லாத ஒன்றை மீண்டும் மீண்டும் பேசி கீழ்த்தரமான அரசியல் செய்கிறார்கள்.’’


மேலும் படிக்க ஒன் பை டூ
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top